Home / Uncategorized / 9 புதிய வடிவங்களில் தங்க நெக்லஸ்கள்
சிவப்புப் புடவையில், ஜொலிக்கும் தங்க ஆபரணங்களைச் சூடி, வெள்ளை யானை படையுடன் தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமி தேவி ஒவ்வொரு இந்து குடும்பத்தின் அங்கமாகும். தரத்திற்கும் செல்வத்திற்கும் அடையாளமாக தங்கத்தை கருதுவதற்கு லட்சுமி தேவியின் திரு உருவமே காரணம். எந்த ஒரு நல்ல நாளைக் கொண்டாடுவதற்கு மக்கள் தங்கம் வாங்குவது வழக்கமாகும். இந்துக்கள் கொண்டாடும் தசரா பண்டிகையிலும் கூட ஒரு குண்டுமணி தங்கமேனும் வாங்காது நிறையாது. நீங்களும் ஒரு தங்கம் விரும்பும் மங்கையராக இருந்தால் அல்லது ஒரு தங்க நெக்ல்ஸ் வாங்கலாம் என்னும் எண்ணும் ஆளாக இருந்தால், உங்கள் செயலை எளிதாக்க இங்க சில புதிய மக்கள் விரும்பும் வடிவங்களை கொடுத்துள்ளோம்.
Table of Contents
இந்த எளிய நெக்லஸில் தங்கத்தின் தரமும் அழகும் வெளிப்படுகிறது. இந்த வடிவ நெக்லஸானது இலை, பூ மற்றும் மொட்டின் வடிவங்களிலும் கிடைக்கும். இவ்வகை நெக்லஸின் சரம் தடிமனாக இருந்தால் தான் இதன் பாணி தெளிவாக தெரியும். அப்பொழுது தான் கழுத்தில் அழகாக அமர்ந்து மிளிரும்.
சிறிய நிகழ்ச்சிகள், கூட்டங்கள் மற்றும் விழாக்களுக்கு ஏற்ற நெக்லஸ் இவை. இந்திய கலாச்சாரம் மற்றும் மேற்கத்திய வடிவத்தின் சங்கமமாக இந்த இலை வடிவம் விளங்குகிறது. இவ்வகை நெக்லஸ்கல் மிகவும் மெலிதாகவும் இலகுரகமாகவும் இருக்கும்.
குந்தன் வகை நகைகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. பழங்கால அரச குடும்பத்தினரால் அணியப்பட்ட இவ்வகை நகைகள் திறமை வாய்ந்த தச்சரால், விலை உயர்ந்த கற்கள் மற்றும் முத்துக்களைக் கொண்டு செய்யப்படுபவை. சற்றே கனமாக இருந்தாலும் இந்த தலைசிறந்த படைப்பு கம்பீரமாகக் காட்சி அளிக்கும்.
தங்கம் மற்றும் மாணிக்கம் கலந்த நெக்லஸ்கல் ஒரு தரமான கலவை ஆகும். மாணிக்கத்தின் ஜொலிப்பு தங்கத்தின் தரத்துடன் கலந்து பிற கலவைகளில் இருந்து தனித்து நிற்கும். தாமரை மற்றும் ஓம் வடிவம் கொண்டுள்ள இந்த நெக்லஸ் பரிசுத்தமாகவும் தெய்வத்தன்மை கொண்டும் விளங்குகிறது.
பொற்காசு நெக்லஸ் காசுமாலை என்றும் அழைக்கப் படுகிறது. நமது கலாச்சாரத்திற்கும் நாகரிகத்திற்கும் இடையே இருக்கும் பந்தத்தின் அடையாளமாக இந்த நெக்லஸ் விளங்குகிறது. திருமண விழாக்களுக்கும் திருவிழாக்களுக்கு ஏற்ற நகை இது.
தற்போதைய காலத்தில் அடுக்கு நெக்லஸ் தான் புகழ் பெற்றவை. நான்கு அடுக்குகளுடன் மயில் வடிவம் கொண்டுள்ள இந்த நகை அழகு மிகுந்தது. பல வண்ண முத்துக்களைக் கொண்டு வடிவமைத்த மயிலுடன் தங்கமும் சேர்ந்து பெண்கள் மனதைக் கொள்ளை கொள்ளும்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பிரத்தியோக வடிவம் மீனாகாரி ஆகும். தங்கத்தின் மீது பல்வேறு வண்ண எனாமலைக் கொண்டு செய்யப்பட்ட வேலைப்பாடு கண்ணைப் பறிக்கின்றது. புடவை மற்றும் கலாச்சார உடைகளுக்கு மேலும் அழகூட்டும் இந்த நகை.
வீர இளவரசி “மஸ்தானி” யின் நினைவாக வடிவமைக்கப்பட்ட நெக்லஸ் இது. புகழுக்கும் உயர்வுக்கும் அடையாளம் இந்த நெக்லஸ். இந்நகையை அணிந்தால் ஒரு இளவரசி போல் தோன்றுவீர்கள். புடவை மற்றும் லெஹெங்கா போன்ற உடைகளுடன் பொருந்தும்.
ஒரு முத்தின் அழகே அபாரம். அத்துடன் தங்கம் மற்றும் வைரம் சேர்ந்தால் அதன் அழகை ஒப்பிட வார்த்தை இல்லை. அரசக்குடும்பத்தின் அடையாளமாக எப்பொழுதும் முத்து மாலை விளங்கி வருகிறது. ராஜநடை மற்றும் அழகும் சேர்ந்த கலவை இந்த நெக்லஸ்
பட மூலம்: PN காடகில், அமேசான்.காம், பின்டெரெஸ்ட், ஸ்டைலஸ்அட்லைப், ஸ்டைல்கிரேஸ்
COMMENTS (0)