வீடு / சமையல் குறிப்பு / பசலைக்கீரை பன்னீர்

Photo of Saag Paneer by Tanushree Aich at BetterButter
2747
187
4.8(0)
0

பசலைக்கீரை பன்னீர்

May-12-2016
Tanushree Aich
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஜாமி ஆலிவர்
  • வெஜ்
  • ஈஸி
  • மத்திய பிரதேசம்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேவையான பொருட்கள்:
  2. பசலைக் கீரை 1 நடுத்தர அளவு கட்டு ( நறுக்கியது)
  3. பன்னீர்/ காட்டேஜ் சீஸ் 200 கிராம்
  4. வெங்காயம் 1 (நடுத்தரமாக வெட்டியது)
  5. தக்காளி 1 (நடுத்தரமாக வெட்டியது)
  6. கொத்தமல்லி இலை வெட்டியது 1/4 கப்
  7. தயிர் 1/4 கப்
  8. இஞ்சி 1 அங்குலம் (துருவியது)
  9. ஜாதிக்காய் ஒரு துளி துருவியது
  10. பூண்டு 5-6 பெரிய பல் (வெட்டியது)
  11. பச்சைமிளகாய் 2-3 (வெட்டியது)
  12. பிரிஞ்சி இலை 2
  13. சீரகம் 1 டீக்கரண்டி
  14. சீரகத்தூள் 1 டீக்கரண்டி
  15. கொத்தமல்லி தூள் 1 டீக்கரண்டி
  16. காஷ்மிர் சிகப்பு மிளகாய்த்தூள் 2 டீக்கரண்டி
  17. மஞ்சள்த்தூள் 1/4 டீக்கரண்டி
  18. க்ரீம் 2 தேக்கரண்டி
  19. எண்ணெய் 3 தேக்கரண்டி
  20. சர்க்கரை ஒரு துளி
  21. சுவைகேற்ப உப்பு

வழிமுறைகள்

  1. கடாயியை சூடு செய்து அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானது சீரகம் சேர்த்துக்கொள்ளவும். அது பொறிய தொடங்கியதும் பிரிஞ்சி இலை, துருவிய இஞ்சி, வெட்டிய பூண்டு மற்றும் பச்சைமிளகாய் சேர்த்துக் கொள்ளவும். இவைகளை நன்றாக வதக்கிகொள்ளவும்.
  2. இவற்றை வேகவிட்டு பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் சிறிது உப்பு சேர்த்துக் கொண்டு இளஞ்சிவப்பு நிறம் வரும் வரை வேகவிடவும். வெட்டிய தக்காளியை சேர்த்து அது கூழ்ப் போன்று ஆகும் வரை மசித்து வேகவிடவும்.
  3. அடுப்பை அணைத்து விட்டு கடாயை ஆறவிடவும். பின் மென்மையான கடைந்த தயிர் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கிளறி விடவும்.
  4. இப்போது மசாலா தயார்செய்வதற்கு- மஞ்சள்தூள், சீரகத்தூள், கொத்தமல்லி தூள், சிகப்பு மிளகாய்த்தூள் மற்றும் துருவிய ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும். குறைவான தீயில் நன்றாக மசாலா வேகும் வரை சமைக்கவும்.
  5. கலவை மிகவும் வற்றி இருந்தால் மேலும் 2-3 தேக்கரண்டி தயிர் சேர்த்துக்கொள்ளவும். சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து குழம்பு எண்ணெய் விட்டு வரும் வரை வேகவிடவும்
  6. பின்பு நறுக்கிய கீரையை சேர்த்துக் கொள்ளவும். கீரையின் அளவு குறையும் வரை கிளறிக்கொண்டே அவற்றை வேகவிடவும், கீரை லேசாக தளர்ந்துவிடும். பின்பு கீரையின் அளவு குறைந்தவுடன் மேலும் ஒரு நிமிடம் வேகவிடவும்.
  7. அடுப்பை அணைத்து விட்டு வெட்டிய கொத்தமல்லி இலை சேர்க்கவும் மற்றும் சமைத்து வைத்த மசாலாவை அரைத்துக் கொள்ளவும், பிரிஞ்சி இலையை அதில் இருந்து எடுத்து விட்டு அரைக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்க.
  8. கடாயை சூடு செய்து எண்ணெய் ஊற்றவும் பின் அதில் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்துக் கொள்ளவும். மேலும் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொண்டு 2 தேக்கரண்டி க்ரீம் சேர்த்துக்கொள்ளவும். இதை நன்றாக கலந்துக் கொள்ளவும்.
  9. 25-30 கிராம் துருவிய பன்னீரை நேரடியாக கடாயில் சேர்த்துக்கொண்டு பின் வெட்டிய பன்னீரை சேர்த்துக்கொள்ளவும் இதனை லேசான பொன்னிறமாக வரும்வரை வதக்கிகொள்ளவும். பின் இதில் மசாலாவை சேர்த்துக்கொண்டு பன்னீர் அதில் நன்றாக ஊரும் படி செய்துக்கொள்ளவும். இதனை புல்ஹா, ரொட்டி அல்லது நாணுடன் சேர்த்து உண்ணலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்