வீடு / சமையல் குறிப்பு / பருப்பு உருண்டைக் குழம்பு

Photo of Paruppu Urundai Kuzhambu by Sundari Pnp at BetterButter
1168
17
5.0(0)
0

பருப்பு உருண்டைக் குழம்பு

May-21-2016
Sundari Pnp
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்து - 1 தேக்கரண்டி
  4. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
  5. கறிவேப்பிலை - கொஞ்சம்
  6. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  7. சின்ன வெங்காயம் - 20 தோலுரிக்கப்பட்டது
  8. N/A
  9. பூண்டு - 10 பற்கள்
  10. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  11. உப்பு - சுவைக்கேற்ற அளவு
  12. தூள் வெல்லம் - 1/4 தேக்கரண்டி ( விருப்பம் சார்ந்தது)
  13. கொத்துமல்லி - 2 தேக்கரண்டி
  14. சாம்பார்பொடி கொத்துமல்லி - 2 தேக்கரண்டி
  15. புளி -1 பெரிய நெல்லிக்காய் அளவு
  16. கடலை பருப்பு அல்லது துவரம் பருப்பு - 3/4 கப்
  17. சீரகம் - 1.5 தேக்கரண்டி
  18. காய்ந்த மிளகாய் - 2-3
  19. தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
  20. உப்பு - சுவைக்கேற்ற அளவு

வழிமுறைகள்

  1. 3/4 கால கடலைப் பருப்பு அல்லது துவரம் பருப்பைத் தண்ணீரில் 2-3 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும். அதிகப்படியானத் தண்ணீரை வடிக்கட்டவும். ஊறவைத்த பருப்பு, 2-3 சிவப்பு மிளகாய், உப்பு., 1 தேக்கரண்டி தேங்காய் துருவல் ஆகியவற்றை கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும், சாந்தாக அமைக்க வேண்டாம்.
  2. 10 நறுக்கப்பட்ட சின்ன வெங்காயம், 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி கொத்துமல்லி, கொஞ்சம் கறிவேப்பிலை சேர்க்கவும். பருப்பு வடைக்குத் தயார் செய்வதுபோல் செய்துகொள்ளவும்.தேவைப்பட்டால் உப்பை சரிசெய்யவும்.
  3. எலுமிச்சை அளவுக்கு உருண்டைகள் செய்து இட்லி பாத்திரத்தில் 10 நிமிடங்கள் வேகவைக்கவும். உருண்டைகளை வைப்பதற்கு முன் இட்லி தட்டில் எண்ணெய் தடவிக்பொள்ளவும். இட்லிக்கு தயார்செய்வதுபோல் அடிப்பாகத்தில் போதுமானத் தண்ணீர் வைக்கவும். செயல்முறை இட்லி செய்வதுபோல்தான்.
  4. 2-3 தேக்கரண்டி எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்திக்கொள்ளவும் (நல்லெண்ணெய் சிறந்த்து). 1 தேக்கரண்டி கடுகு சேர்த்து வெடிக்கச்செய்யவும். 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, 1/4 தேக்கரண்டி வெந்தயம், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்க்கவும்.உளுத்தம்பருப்பு பொன்னிறமாகும்வரை வதக.கவும்.
  5. ஒரு சிட்டிகை பெருங்காயம், 10 தோலுரித்தஙபூண்டு பற.கள், 10 நறுக்கப்பட்ட சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்க்கவும். வெங்காயம் வெளுக்கும் வரை வதக்கவும். 1 தேக்கரண்டி நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, கூழாகும்வரை வதக்கவும்.
  6. புளிக் கரைசலைப் பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும். கொஞ்சம் தண்ணீர் விட்டு தேங்காய், 1/2 தேக்கரண்டி சீரகம், 2 சின்ன வெங்காயம் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  7. புளிக் கரைசல், 1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள், 2 தேக்கரண்டி சாம்பார் பொடி, 1/4 தேக்கரண்டி வெல்லம் (விருப்பம் சார்ந்தது), உப்பு, தேங்காய் சாந்து சேர்த்துக்கொள்ளவும். மிதமானச் சூட்டில் 5 நிமிடங்களுக்கு நன்றாகக் கலந்து கொதிக்கவிடவும். தேங்காயின் பச்சைவாடை போகவேண்டும்.
  8. உப்பு்காரம் சோதிக்கவும். தேவைப்பட்டால் சிவப்பு மிளகாய் சேர்க்கவும்
  9. அடுப்பைச் சிம்மில் வைத்து, உருண்டைகளைக் கவனமாக ஒன்றன்பின் ஒன்றாக குழம்பில் போடவும். கலக்கக்கூடாது. அடுப்பை சிறு தீயில் வைத்து, 7 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.
  10. இதற்குள் உருண்டைகள் வெந்திருக்கும். தேவைப்பட்டால் மேலும் சில மணி நேரம் சிம்மில் வைக்கவும். எல்லாப் பக்கமும் வேவதற்கு திருப்பவேண்டியது இருந்தால், கவனமாகவும் ஜாக்கிரதையாகவும் செய்யவும், உருண்டைகள் உடையலாம்.
  11. பரிமாறுவதற்கு முன் கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்