Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

ஜாவெத் ஹபீப் உங்கள் முடியை துண்டால் உலர்த்த வேண்டாம் என்று உங்களிடம்  கேட்டுக்கொள்கிறார்!

உங்கள் முடி, மந்தமாகவும் மற்றும் வறட்சியாகவும், ஏறக்குறைய அதற்கு உயிர் இல்லாததுபோல் சிக்கலாக தோன்றுகிறதா? ஆம் எனில் ஏன் இது நடக்கிறது மற்றும் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று முடி நிபுணர் ஜாவெத் ஹபீப் முக்கியமான காரணங்களை விளக்குகிறார். நம் முடியை கவனிக்க பல வருடங்களாக இந்த தவறுகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்று ஜாவெத் கூறுகிறார் மேலும் அதற்காக அவரிடம் மிகவும் நேரடியான மற்றும் எளிமையான சிகுச்சை இருக்கிறது. அதனால் நீங்களும் உங்கள் முடியுடன் இந்த தவறுகளை செய்து கொண்டிருக்கிறீர்களா?

1) தலைக்கு குளித்தபிறகு நீங்கள் ஒரு துண்டு பயன்படுத்துகிறீர்களா?

ஆமாம், நாம் அனைவரும் அப்படிதான் செய்கிறோம் ஆனால் உங்கள் முடி சாயம் செய்திருந்தால், எரிந்த முடி அல்லது சொரசொரப்பான முடியாக இருந்தால், பின் சாதாரண துண்டுகளை பயன்படுத்துவதால், முடி மேலும் உடைய முனைகிறது மற்றும் மோசமாகிறது. துண்டுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, ஒரு வேட்டி அல்லது டி-ஷர்ட் பயன்படுத்துவது சிறந்தது. மேலும் தெரிந்து கொள்ள, ஜாவெத் ஹபீப்ன் காணொளியை பாருங்கள்-

2) கடின நீரில் நீங்கள் தலைக்கு குளிக்கிறீர்களா?

தண்ணீரின் தன்மை வெவ்வேறு பிரதேசங்களுக்கு வித்தியாசமாக  இருக்க முனைகிறது. முடியை உப்பு/கடின நீரில் குளித்தால், பின் எத்தனை கண்டிஷனர்கள் நீங்கள் தடவினாலும், அது பிரகாசிக்காது ஏன்னெனில் மரத்தின் வேர் சேதமடைந்தால், உங்களுக்கு எப்படியும் எந்த பழமும் கிடைக்க வழி இருக்காது! தண்ணீர் உப்பாக இருக்குமெனில், பின் அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்க்கவும், பதட்டப்படத் தேவை இல்லை என்று ஜாவெத் கூறுகிறார். விளக்கங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பார்க்கவும்.  

3) நீங்கள் ஷாம்ப்பூ போடுவதற்கு முன் எண்ணெய் மசாஜ் செய்வீர்களா?

நினைவு கொள்ளுங்கள், மிகவும் பொதுவான காரணம் என்னவென்றால் மந்தமான, உயிரற்ற முடி ஈரப்பதம் இல்லாதது. நம் சருமத்திற்கு எப்படி ஒரு ஈரப்பதம் தேவைப்படுகிறதோ, நம் முடிக்கும் சரியான ஊட்டச்சத்து தேவை, அதனால் ஷாம்ப்பூ பயன்படுத்துவதற்கு முன் எப்போதும் இன்றியமையாதது(அதாவது  எண்ணெய் மசாஜ்) ஆகும்.