Home / Recipes / Kayal special prawn vada

Photo of Kayal special prawn  vada by khadheeja irfana at BetterButter
742
3
0.0(0)
0

Kayal special prawn vada

May-16-2018
khadheeja irfana
60 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kayal special prawn vada RECIPE

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் என்னும் ஊரில் மிகவும் பிரபல்யமான பாரம்பரிய சுவையான மஞ்சள் வாடா.

Recipe Tags

  • Non-veg
  • Hard
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Sauteeing
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. அரிசி மாவு ஒரு கப்
  2. குழைந்த சாதம் அரை கப்
  3. தேங்காய் 2 அ அல்லது 3 மேஜைக்கரண்டி
  4. மஞ்சள் தூள் சிறிது
  5. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
  6. உப்பு தேவைக்கு
  7. உள் அடக்கம் வைக்க:
  8. பெரிய வெங்காயம் 5
  9. பச்சை மிளகாய் 4 பொடியாக நறுக்கியது
  10. தேங்காய் அரை மூடி துருவியது
  11. உப்பு தேவைக்கு
  12. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
  13. கருவேப்பிலை சிறிது
  14. இறால் 15 to 20
  15. மாசி தூள் ஒரு டீஸ்பூன்
  16. கீரை பொடி ஒரு டீஸ்பூன்

Instructions

  1. முதலில் வாடாவிற்கு தேவையான உள்அடக்கத்தை தயார் செய்து கொள்ளவும்.
  2. ஒரு சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  3. அதோடு இறால்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. பின்னர் துருவிய தேங்காய், மாசித்தூள்,கீரை பொடி சேர்த்து அடுப்பை அனைத்து விடவும். இந்த கலவையை ஆற வைத்துக் கொள்ளவும்.
  5. வாடா செய்ய: ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,குழைந்த சாதம் மஞ்சள்தூள்,உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து மிதமான சூட்டில் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.
  6. மஞ்சள் வாடா தட்டும் முறை: ஒரு பலகையில் காட்டன் துணியை விரித்து அதில் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  7. ஒரு சிறு மாவு உருண்டையை எடுத்து உள்ளங்கை அளவு வட்டமாக தட்டவும்.
  8. மாவை தட்டும் பொழுது ஒரு சிறு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு தண்ணீரை தொட்டு தட்டவும்.
  9. பின் இன்னொரு சிறு மாவு உருண்டையை எடுத்து அதே போல் உள்ளங்கை அளவு வட்டமாக தட்டவும்.
  10. தட்டிய ஒரு வட்டத்தில் ஒரு மேஜைக்கரண்டி செய்து வைத்த இறால் கலவையை வைக்கவும்.
  11. இன்னொரு தட்டிய வட்டத்தை அதன்மேல் வைத்து விரலில் தண்ணீர் தொட்டு அதனை சுற்றிவர ஒட்டி மூடி விடவும். பிரிந்து வராதது போல் எல்லா பக்கமும் தண்ணீர் தொட்டு மூடிவிடவும்.
  12. இதைப் போல் எல்லா மாவையும் வாடாவாக மேலே சொன்ன முறைப்படி தட்டி வைக்கவும்.
  13. பின்னர் ஒரு வாணலியில் பொரிப்பதற்கு எண்ணெய் சேர்த்து சூடானதும் மிதமான சூட்டில் தட்டிவைத்த வாடாகளை பொரித்து எடுக்கவும்.
  14. அபார சுவை கொண்ட காயல் ஸ்பெஷல் மஞ்சள் வாடா தயார். கரி கஞ்சியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE