வீடு / சமையல் குறிப்பு / சுண்டக்காய் குழம்பு

Photo of Sundakkai Kuzhambu by Anusha Praveen at BetterButter
4259
35
4.3(0)
0

சுண்டக்காய் குழம்பு

May-11-2016
Anusha Praveen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுண்டைக்காய் 15 குழவியால் நசுக்கப்பட்டது.
  2. கத்திரிக்காய் 4 கால் பாகமாக வெட்டப்பட்டது
  3. வெங்காயம் 6ல் இருந்து 7 தோலுரிக்கப்பட்டது
  4. தக்காளி 1 பெரிய அளவிலானது கட்டங்கட்டமாக நறுக்கிக்கொள்ளவும்
  5. புளி ஒரு சிறிய குண்டின் அளவு
  6. உப்பு சுவைக்கு
  7. எண்ணெய் 2 தேக்கரண்டி
  8. மசாலா சாந்: புதிதாகத் துருவப்பட்ட தேங்காய் 3 தேக்கரண்டி
  9. வெள்ளை கசகசா 1 தேக்கரண்டி
  10. பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி
  11. பூண்டு பல் 4ல் இருந்து 5
  12. சிவப்பு மிளகாயத் தூள் 1 தேக்கரண்டி
  13. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  14. தண்ணிர் ¼ c
  15. மசாலா பொடி : காஷ்மீர் மிளகாயத் தூள் ½ தேக்கரண்டி
  16. சாம்பார் பொடி 1 தேக்கரண்டி
  17. மல்லித்தூள் 2 தேக்கரண்டி
  18. தாளிப்புக்கு: நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி
  19. கடுகு 1 தேக்கரண்டி
  20. பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி
  21. வெந்தயம் 1 தேக்கரண்டி
  22. உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
  23. கறிவேப்பிலை 1 கொத்து

வழிமுறைகள்

  1. புளியை வெந்நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து கரைசலை 1 கப் தயாரிக்கவும். கரைசலைக் கரைப்பதற்கேற்ற தண்ணீர்.
  2. 2 தேக்கரண்டி எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்திக்கொள்க. வெங்காயத்தைச் சேர்த்து ஊதா நிறமாக மாறும்வரை வறுக்கவும்.
  3. இப்போது நசுக்கப்பட்ட சுண்டைக்காயையும் கத்திரிக்காயையும் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு அல்லது இரண்டு நிமிடத்திற்கு நடுத்தர தீயில் வதக்கவும்.
  4. அடுத்து நறுக்கப்பட்ட தக்காளியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 2 நிமிடங்களுக்கு மிதமானச் சூட்டில் வேகவைக்கவும்.
  5. இந்தக் கலவையுடன் மல்லித்தூள் சாம்பார்த்தூள் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
  6. இவற்றோடு புளிக்கரைசலை காஷ்மீர் மிளகாய்ப்பொடியுடன் சேர்த்து சிம்மில் 5 நிமிடங்கள் புளியின் பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
  7. இதற்கிடையில் ¼ c தண்ணீர் பயன்படுத்தி மென்மையான ஒரு சாந்தாக மசாலா சாந்துக்கு அனைத்து சேர்வைப்பொருள்களையும் அரைக்கவும். உங்கள் பிளெண்டரை இதற்குப் பயன்படுத்தவும்.
  8. புளியின் பச்சை வாடை போனதும், மசாலா சாந்தை உப்புடன் இந்தக் கலவையோடு சேர்த்து சிம்மில் 5ல் இருந்து 7 நிமிடங்கள் மசாலாவின் சாந்து போகும்வரை வைக்கவும்.
  9. நல்லெண்ணெயுடன் கடாயைச் சூடுபடுத்தவும்.
  10. கடுகைப் பொறித்து உடனே சீரகம், வெந்தயம், பெருஞ்சீரகம், உளுத்தம்பருப்பு ஆகியவற்றை கறிவேப்பிலையுடன் சேர்க்கவும்.
  11. பருப்பு பொன்னிறமானதும், குழம்புடன் இதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  12. சூடான சாதத்தோடும் அப்பளத்தோடு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்