வீடு / சமையல் குறிப்பு / இடியாப்பம் ஆட்டுகால்பாயா

Photo of Idiyaapam aatukaal paaya by Shobana Rajesh at BetterButter
344
0
0.0(0)
0

இடியாப்பம் ஆட்டுகால்பாயா

Sep-24-2018
Shobana Rajesh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இடியாப்பம் ஆட்டுகால்பாயா செய்முறை பற்றி

இந்த இடியாப்பம் ஆட்டுக்கால் பாயா மிகவும் ருசியான ஆரோக்கியமான உணவாகும் இது சிறப்பான பண்டிகை நாட்களிலும் அல்லது விருந்தினருக்காக செய்யப்படும் விருந்து பரிமாற கூடிய ஒன்று

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இடியாப்பம் செய்வதற்கு
  2. பச்சரிசி மாவு 2 மேசை கரண்டி
  3. உப்பு தேவையான அளவு
  4. நல்லெண்ணெய் ஒரு மேசைக்கரண்டி மாவில் சேர்க்க
  5. சூடான தண்ணீர் ஒரு கப்
  6. ஆட்டுக்கால் பாயா செய்ய தேவையான பொருட்கள்
  7. ஆட்டுக்கால் 6 துண்டுகள்
  8. வெங்காயம் பெரியது 2
  9. தக்காளி பெரியது ஒன்று
  10. பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
  11. மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலா தலா ஒரு தேக்கரண்டி
  12. பச்சை மிளகாய் புதினா கொத்தமல்லி தலா ஒரு கைப்பிடி
  13. தேங்காய் மற்றும் கசகசா சோம்பு அரைத்த விழுது இரண்டு மேசைக்கரண்டி
  14. பட்டை ஏலக்காய் கிராம்பு தலா 3
  15. பிரிஞ்சி இலைகள் 4

வழிமுறைகள்

  1. 1.முதலில் இடியாப்பம் செய்ய பச்சரிசி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து தேவையான உப்பு சேர்த்து கொள்ள வேண்டும் 2. பின்பு நல்ல நீர் சேர்த்து மெதுவாக சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிசைந்து இசையாபம் அச்சியில் பிழிய வேண்டும்
  2. 1.ஆட்டுக்கால் பாயா செய்ய முதலில் ஆட்டுக் காலை நன்றாக சுத்தம் செய்து இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேர்த்து 20 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 2. பின்பு ஒரு பாத்திரத்தில் பட்டை லவங்கம் தாளித்து வெங்காயம் நன்றாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும். 3. புதினா கொத்தமல்லி பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் பின்பு ஆட்டு காலை மட்டும் அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கி கொண்டே இருக்க வேண்டும். 4.இப்பொழுது மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலா அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கிளறி உப்பு சேர்த்து நன்றாக கிரேவி பதம் வரும் வரை கிளறி வேக வைத்த தண்ணீரை அதனுள்சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். 5.இறக்குவதற்கு 10 நிமிடங்கள் முன்பு தேங்காய் விழுதை சேர்த்து நன்றாகக் கொதித்ததும் கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்