வீடு / சமையல் குறிப்பு / நெல்லை ஏர்வாடி நெய் சோறு

Photo of Nellai Eruvadi Ghee Rice by Fathima Sujitha at BetterButter
685
2
0.0(0)
0

நெல்லை ஏர்வாடி நெய் சோறு

Sep-30-2018
Fathima Sujitha
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நெல்லை ஏர்வாடி நெய் சோறு செய்முறை பற்றி

எங்களின் ஊரின் பாரம்பரிய உணவுகளின் ராஜா ...நெய் சோறுக்கு என்று தனி மரியாதை உண்டு ...ஆரம்ப காலங்களில் எங்கள் ஊரில் எல்லா கல்யாண வீடுகளிலும் நெய் சோறு தான் ... நெய் சோறை சுவைக்காத நாவுகள் ஏர்வாடியில் இருப்பது அரிதிலும் அரிது ... அதை நினைத்தாலே, அதன் மனமும், சுவையும், நம் மனதோடும், நாவோடும் நடனம் ஆடிவிட்டுத்தான் நகரும்... பட்டை, ஏலம், கிராம்பு மற்றும் ரம்பை இலையின் இலேசான வாசத்தோடு, தூக்கும் நெய் வாசமும் கலந்த, பளபளக்கும் நெய் சோறை பார்த்தாலே நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்... கறி குழம்பு , எதுவும் இல்லாமல், அப்படியே ஒரு பிடி பிடிக்கலாம்...அப்படிபட்ட நெய் சோறு எப்படி செய்யலாம் னு பார்க்கலாம்..!!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புழுங்கல் அரிசி - 1 கிலோ
  2. தேங்காய் - பெரியது ஒன்று
  3. வெங்காயம் - 2
  4. தக்காளி - சிறிதளவு (விருப்பப்பட்டால் ..தக்காளி ரொம்ப சேர்க்க கூடாது)
  5. இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
  6. கறிவேப்பில்லை - ஒரு கொத்து
  7. மிளகாய் - 4
  8. பட்டை - 1
  9. கிராம்பு - 5
  10. ஏலக்காய் - 6
  11. ரம்பை இலை - 1
  12. தயிர் - 1 கப்
  13. முந்திரி, கிஸ்மிஸ் - சிறிதளவு
  14. நெய் - தேவையான அளவு
  15. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் தேங்காய் துருவி பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. முதல் பால் இரண்டாம் பால் னு தனி தனியாக வைக்க வேண்டும் என்று இல்லை மொத்தமாக ஊற்றி கொதிக்க வைக்க போவதால் மொத்தமாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  3. அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. ஒரு கடாயில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும்.
  5. இஞ்சி பூடு சேர்த்து வதக்கவும்.
  6. ரம்பை இலை, கறிவேப்பில்லை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  7. நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும் . (சிறிதளவு வெங்காயத்தை எடுத்து வைத்து கொள்ளவும்.)
  8. இந்த Stage ல் தயிர் சேர்த்து கிளறவும்.
  9. எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலில் சிறதளவு தக்காளி மற்றும் எடுத்து வைத்த வெங்காயத்தை சேர்த்து இவற்றை ஊற்றி கிளறவும். ( ஒன்றுக்கு இரண்டு மடங்கு தண்ணீர் தேங்காய் பால் உடன் தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.)
  10. கொதி வந்ததும், உப்பு போட்டு கிளறவும்.
  11. ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து பிரியாணி தம் போடுவதை போல் தம் போட்டு இறக்கவும்.
  12. அரிசி வெந்த உடன் நெய்யில் பொரித்து முந்திரி கிஸ்மிஸ்ஸை நெய்யுடன் ஊற்றவும்.
  13. ஆட்டுக்கறி குழம்பும், கத்தரிக்காய் பருப்பும், கத்தரிக்காய் பச்சடியும் வைத்து பரிமாறவும்...அதன் சுவை உங்களை மீண்டும் மீண்டும் சமைக்கத் தூண்டும்.
  14. சுவையான நெல்லை ஏர்வாடி நெய்சோறு தயார் ...!!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்