முதலில் இறைச்சி செய்வதற்கு, இறைச்சியை நன்றாக கழுவி அதில் பாதி தயிர்,பாதி சிவப்பு மிளகாய் தூள்,சீரக தூள்,மல்லி தூள்,சோம்பு தூள்,கருவேப்பிலை முழுசாக, உப்பு,இஞ்சி பூண்டு விழுது (பாதி)சேர்த்து கிளறி வைக்கவும்.
பின் ஒரு கனத்த பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,ஏலம்,லவங்கம், தயிர்,கருவேப்பிலை, பச்சை மிளகாய், பிரியாணி இலை,இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் வெங்காயம்,தக்காளி, சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இறைச்சி யை அதில் சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.
இறைச்சியை மிதமான சூட்டில் வேக வைக்க வேண்டும்,அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக விட வேண்டும்.
அவ்வப்போது திறந்து கிளறி விட வேண்டும்.1 மணி நேரம் கழித்து அதில் வாழைக்காய், தேங்காய்,காசா காசா மற்றும் முந்திரி சேர்த்து அரைத்த கலவையை சேர்க்க வேண்டும்.
எண்ணெய் விடும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
பருப்பு செய்வதற்கு முதலில் பருப்பை ஒரு தவாவில் போட்டு நன்கு வறுத்து கொள்ளவும்.
பின் வறுத்த பருப்பை ஒரு குக்கர்ரில் போட்டு அதில் தக்காளி, கத்திரிக்காய்,வெங்காயம்,பச்சை மிளகாய், பூண்டு, மாங்காய்,கருவேப்பிலை, மஞ்சள் தூள்,சிவப்பு மிளகாய் தூள்,சீராக தூள் சேர்த்து முடி whistle போடவும்(3 -5 சத்தம்).
பின் திறந்து அதை blender வைத்து நன்கு அடித்து கொள்ளவும்.
ஒரு தவாவில் நெய் ஊற்றி அதில் பட்டை,லவங்கம், ஏலம்,இஞ்சி பூண்டு விழுது, கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி அதில் பருப்பை ஊற்றி கொதிக்க வைத்து கொள்ளவும்.
நன்கு ஆறவைத்து அதில் லெமன் ஊறுகாய் மற்றும் மாசி சேர்த்து கிளறவும்.
ரசம் செய்வதற்கு தேவையான பொருள்.
முதலில் மிளகு,மல்லி,சீரகம்,சோம்பு,தேங்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
பின் வெங்காயம்,கருவேப்பிலை சேர்த்து ஒன்னும் பாதியுமாக அரைத்து கொள்ளவும்.
புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். பின் அதை பிசைந்து வடிகட்டவும்.
புளி தண்ணீரில் அரைத்த கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.அதில் வத்தல் சுட்டு போடவும்.
பின்பு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து இந்த கலவையை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க