வாழைக்காய் கருவாட்டு பொரியல்; முதலில் வாழைக்காயைத் தோல் சீவி, கொஞ்சம் கனமாக நீளமாக நறுக்கவும், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை பெருவெட்டாக அரைத்து, உப்பு சேர்த்து வாழைக்காய் துண்டுகளில் பிசறவும்.பின் இருப்பு சட்டியில் எண்ணெயைக் காயவைத்து, சோம்பு தாளித்து, வாழைக்காய் துண்டுகளைப் போட்டு, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.செட்டிநாட்டுக் கல்யாண விருந்தில், இது மிகவும் சிறப்பான உணவஹ் இந்த வாழைக்காய் கருவாட்டுப் பொரியல். முள்ளங்கி சாம்பார்; குக்கரில் அலசிய துவரம் பருப்பு, 3 கப் தண்ணீர் ஊற்றி சிறிதளவு மஞ்சள்தூள் போட்டு 4 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாதூள், உப்பு, புளிக்கரைசல், பெருங்காயத்தூள் சேர்த்து பருப்பு வேகவைத்த குக்கரில் போடவும். முள்ளங்கியை சட்டியில் போட்டு 3 நிமிடம் வதக்கி அதை சாம்பாரில் போட்டு அடுப்பில் கொதிக்க வைத்து சாம்பார் நல்ல பக்குவத்துக்கு வந்ததும் அதன் மேலாக கொத்தமல்லி தூவி இறக்கினால் முள்ளங்கி சாம்பார் தயார்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க