முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் காய்ந்ததும் கடுகு,கருவேப்பிலை, சீரகம்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் சுரைக்காயை சேர்க்கவும்.
பின் அதில் ஊற வைத்த சிறு பருப்பை ,சிவப்பு மிளகாய் தூள்,மஞ்சள் தூள், சீரக தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். தண்ணீர் ஊற்றி 4 whistle வரும் வரை போடவும்.
சுவையான சுரைக்காய் பருப்பு தயார்
பீர்க்கங்காய் மோர் குழம்பு செய்வதற்கு
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் பீர்க்கங்காயை சேர்க்கவும்
தேங்காய்,சின்ன வெங்காயம் ,ஊற வைத்த கடலைப்பருப்பு, பச்சை மிளகாய்,சீரகம் எல்லாவற்றையும் சேர்த்து மை போல அரைக்க வேண்டும்
அரைத்த விழுதை கொதித்த பீர்க்கங்காயுடன் சேர்க்க வேண்டும்.சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.
பின்பு இதை சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
கொதித்த உடன் அதை இறக்கி வைத்துவிட்டு. தயிரை நன்கு அடித்து கொள்ளவும்.
நன்கு ஆறிய பிறகு அடித்து வைத்த தயிர் சேர்க்க வேண்டும்.
கடைசியாக தாளித்து அதில் ஊற்ற வேண்டும்
பாகற்காய் புளி குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்களை
முதலில் வட்டமாக வெட்டிய பாகற்காயை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
பின் வேறொரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு ,சீரகம் ,வெந்தயம் ,கருவேப்பிலை,பூண்டு சேர்க்கவும்.
பின்பு அதில் சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தேங்காய் பூண்டு, மிளகு பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
அரைத்த கலவையை புளியுடன் சேர்த்து எண்ணெயில் ஊற்றவும்
நன்கு கொதித்த பின் பொரித்து வைத்த பாகற்காயை சேர்க்கவும்
இரால் பாகற்காய் பொரியல் செய்வதற்கு தேவையான பொருட்கள்.
முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
பின் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்
வெங்காயம் வதங்கியதும் பாகற்காய் இறால் போட்டு வதக்க வேண்டும்.
பின் அதில் மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.1/4கப் தண்ணீர் ஊற்றி கிளறவும்.
குக்கரை மூடி 3 விசில் போட வேண்டும்.
கடைசியாக தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கவும்
கசப்பு இல்லாத இரால் பாகற்காய் பொரியல் தயார்
மஞ்சள் பூசணிக்காய் அல்வா செய்வதற்கு தேவையான பொருட்கள்
ஒரு கனத்த பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
பின் அதில் துருவிய மஞ்சள் பூசணிக்காயை வதக்கவும்
கால் கப் பால் ஊற்றி மூடி போட்டு வேக விட வேண்டும்
நன்கு வெந்த பிறகு சிறிது நெய், சர்க்கரை, கலர் பொடி ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விடவும்.
கடைசியில் நெய் விட்டதும் முந்திரி போட்டு இறக்கவும்
புடலங்காய் ஸ்டஃப்டு சப்பாத்தி செய்வதற்கு.
முதலில் கோதுமை மாவை உப்பு சிறிது எண்ணெய் ,தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பின் புடலங்காய், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வேகவைத்துக்கொள்ள வேண்டும்.
அதைப் பிசைந்து சிறிது சீரகத்தூள், மஞ்சள் தூள்,உப்பு, மிளகாய் தூள் ,மல்லி இலை போட்டு கிளறி கொள்ளவும்.
மாவை திரட்டி இந்த கலவையை அதில் வைத்து தட்டி கொள்ளவும்.
தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி போட்டு எடுக்கவும்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க