வீடு / சமையல் குறிப்பு / வெள்ளம் அதிரசம்

Photo of VELLAM ADHIRASAM by Shobana Rajesh at BetterButter
598
0
0.0(0)
0

வெள்ளம் அதிரசம்

Nov-12-2018
Shobana Rajesh
2880 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெள்ளம் அதிரசம் செய்முறை பற்றி

வெல்லம் அதிரசம் பண்டிகை காலங்களில் முக்கியமாக தீபாவளி பண்டிகைகலில் அனைவரும் செய்யக்கூடிய ஒரு சிறப்பான ஒரு வகை ஸ்வீட் ஆகும்.இதை அனைவரும் செய்து உண்டு மகிழ்ச்சி அடையுங்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கடினம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேவையான பொருட்கள்
  2. பாகு வெல்லம் முக்கால் கப்
  3. மாவு பச்சரிசி ஒரு கப்
  4. நீ அதிரசம் தட்ட தேவையான அளவு
  5. சுக்குப் பொடி 2 சிட்டிகை
  6. ஏலக்காய் பொடி 2 சிட்டிகை
  7. சுத்தமான நல்லெண்ணெய் ஒரு டீக்கரண்டி

வழிமுறைகள்

  1. செய்முறை
  2. முதலில் பச்சரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து அதை 5 நிமிடங்கள் சுத்தமான துணியில் நிழலில் உலர்த்தி மிக்ஸியில் பொடித்து மையாக இல்லாமல் சிறிது கரகரப்பாக இருக்கும் அளவிற்கு மாவாக்கிக் கொள்ள வேண்டும்
  3. இப்பொழுது அரைத்த மாவை சலித்து வைத்துக்கொள்ளவேண்டும் இப்பொழுது ஒரு கப் பச்சரிசி கால் கப் என்கிற அளவிற்கு வெள்ளம் எடுத்து அதை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து பின்பு அந்த வெல்லத்தை பாகு காய்ச்சி தக்காளி பழம் பாகு ஆகும் வரை காச்ச வேண்டும்.
  4. தக்காளி பழம் பாகு என்பது வெல்லம் கொதித்து கொண்டிருக்கும்போது நன்றாக நுரை விட்டு கொதிக்கும் போது அதை ஒரு சிட்டிகை ஒரு சொட்டு பாகை ஒரு கால் டம்ளர் தண்ணீரில் விட்டு அந்த பாகு கையிலெடுத்து உருட்டும் அளவிற்கு மிருதுவான ஒரு உருளையாக வரவேண்டும் அதுவே தக்காளிப்பழம் பாகு. அப்படி வந்ததும் உடனே அடுப்பை அணைக்கவேண்டும்
  5. இப்பொழுது அந்தப் பாகில் சலித்து வைத்துள்ள பச்சரிசி மாவை கொட்டி ஏலக்காய் மற்றும் சுக்கை பொடி சிறிது நீர் சேர்த்து நன்றாக அந்த அரிசியுடன் அந்த வெல்லம் கரைந்து வரும் அளவிற்கு நன்றாக கட்டி பிடிக்காமல் கிண்ட வேண்டும்
  6. இப்படி கரைத்து வைத்த மாவில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து அதை ஒரு சுத்தமான கிண்ணத்தில் அல்லது பாத்திரத்தில் ஊற்றி காற்றுப்படாமல் நன்றாக மூடி 24 மணி நேரம் அல்லது ஒரு நாள் முழுவதும் அதை அப்படியே வைத்துவிடவேண்டும்
  7. இப்பொழுது மறுநாள் அந்த மாவு நன்றாக அதிரசம் தட்டும் அளவிற்கு கட்டியாகி வந்திருக்கும் இப்பொழுது அடுப்பில் எண்ணை வைத்து இந்த அதிரச மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கையில் நெய் தடவி சுட்டு எடுக்கலாம்.
  8. ஒவ்வொரு அதிரசம் சுட்டு எடுத்ததும் 2 கரண்டிகளை வைத்து அந்த அதிரசத்தின் நன்றாக அழுத்தி அதில் உள்ள அதிகமான எண்ணெயை பிழிந்து எடுத்து தனியாக வைத்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்