ஆட்டு கறி குழம்பிற்கு,வெங்காயம் தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
இஞ்சி பூண்டு விழுது நன்கு இரண்டு பச்சை மிளகாய் சிறிது உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அரைக்கும் பொருட்களோடு சேர்த்து தேங்காயை நன்கு மைய அரைத்து கொள்ளவும்.
அரை கிலோ ஆட்டு கறியை நன்கு சுத்தம் செய்து எடுத்து கொள்ளவுக்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் தாளிக்கவும்.
நறுக்கிய சிறிய வெங்காயம்,பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு குழைய மிதமான தீயில் வதக்கவும்.
மிளகாய்த்தூள், கரம் மசாலா, சேர்த்து பிரட்டவும்
எண்ணெய் பிரிந்து வரும் போது கழுவிய ஆட்டு கறியை சேர்க்கவும்.
சிறிது நேரம் மூடி வைக்கவும்
தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.
இறங்கியதும் மிதமான தீயில் வைத்து உப்பு,காரம் சரி பார்த்து,சிறிது கஸ்துரி மெத்தி சேர்த்து கொதி விடவும்.
அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
தேங்காய் விழுது சேர்த்து சிறிது நேரம் கொதித்ததும்.மல்லி இலை சேர்த்து இறக்கவும்.
சுவையான ஆட்டு கறி குழம்பு தயார்.
சுத்தம் செய்த கோழி துண்டுகளை எடுத்து கொள்ளவும்.(படங்கள் சிறிது பழுதால் படிவேற்ற முடிய வில்லை )
ஒரு மண்சட்டியில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை,லவங்கம்,அண்ணாச்சி மொக்கு,சேர்த்து பொரிக்கவும்
நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்
நறுக்கிய தக்காளி ,சிறிது உப்பு ,அரை ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
கழுவிய கோழி கறி, மற்றும் மிளகாய்த்தூள், தேவையான உப்பு கரம் மசாலா சேர்த்து மூடி வைத்து vega விடவும்.
கறி வெந்து வரும் போது அரைத்த தேங்காய் விழுதை (முந்திரி சேர்த்த)சேர்த்து நன்கு கொதி விடவும்.
நன்கு கொதி வரும் போது ருசி பார்த்து நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
சப்பாத்தி (ரொட்டி)
இந்த வகை ரொட்டிக்கு அதிகம் எண்ணெய் விட தேவை இல்லை
இரண்டு கப் கோதுமை மாவை எடுத்து அதில் ஒரு முட்டை,ஒரு ஸ்பூன் சர்க்கரை,ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்
அரை மணி நேரம் கழித்து பின்பு ,பிசைந்த மாவில் சிறு சிறு துண்டுகளாக உருட்டி சிறிது கோதுமை மாவில் உருட்டி,பிரட்டி கொள்ளவும்.
உருட்டிய மாவை பூரி தேய்க்கும் கட்டை கொண்டு எண்ணெய் விடாமல் தேய்க்கவும், மெலிதாக இல்லாமல் தேய்த்தால் போதும்(முட்டை சேர்ந்ததால் எண்ணெய் விடாமலே மிருதுவாக இருக்கும்)
தேய்த்த ரொட்டியை தோசை கல்லில் சிறிது ஓரம் மட்டும் எண்ணெய் விட்டு மிதமான தீயில் இரு புறமும் நன்கு வேக வைத்து எடுகவும்.
முட்டை வறுவல்
ஒரு தட்டில்,மிளகாய்த்தூள்,உப்பு, சிறிது இஞ்சி பூண்டு விழுது ,சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு குழைய சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து கொள்ளவும்.
தோசை கல்லில் எண்ணெய் ஊற்றவும்
எண்ணெய் சூடானதும்,மிதமான தீயில் குழைத்த மிளகாய் கலவையையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
பின்பு வேக வைத்த முட்டையை இரண்டாக நறுக்கி அந்த மிளகாய் மசாலா மேல் வைத்து சிறிது நேரம் தீயில் வறுக்கவும்.(புரட்டி போட கூடாது)
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க