பாவ் ரெசிப்பிய பொறுத்தவரை பட்டர் மிகவும் முக்கியமானது
பாவ் பாஜி மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வெறும் வாணலியில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்து வைத்துக் கொள்ளவும்
மசாலா பேஸ்ட் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் பட்டர் விட்டு சூடானதும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்
பின் சிறிது தண்ணீர் விட்டு நன்கு வேகவைத்து மசித்து கொள்ளவும் இந்த மசாலா இந்த மாதிரி கலரில் இருக்க வேண்டும்
தஹீ எனப்படும் தண்ணீர் கிரேவி செய்ய வாணலியில் பட்டர் விட்டு சூடானதும் மிளகாய் தூள் சேர்த்து உடனடியாக அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
பின் சர்க்கரை உப்பு மஞ்சள் தூள் பாவ் பாஜி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
நன்கு கொதித்து சற்று திக்காக வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
மிஷ்ஷல் செய்ய வாணலியில் பட்டர் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
பின் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
பின் வேகவைத்த முளைகட்டிய பயறு சேர்த்து வதக்கவும்
பின் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்
பின் கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
தோசை கல்லை வைத்து சூடாக்கி அதில் பட்டர் விட்டு மிளகாய் தூள் மஞ்சள் தூள் பாவ் பாஜி மசாலா தூள் சேர்த்து பன்னை டோஸ்ட் செய்து கொள்ளவும்
ஒரு தட்டில் டோஸ்ட் செய்த பாவை வைத்து ஒரு கப்பில் தண்ணீர் கிரேவி ஊற்றி வைத்து பின்
தனியாக மிஷ்ஷல்லை ஊற்றி அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் துருவிய கேரட் கொத்தமல்லி தழை ஓமப்பொடி தூவி லெமன் சாறு பிழிந்து விட்டு பரிமாறவும்
இதே போல முளைகட்டிய பயறு பதில் வெஜிடபிள் மற்றும் வேகவைத்து நறுக்கிய முட்டை ,சிக்கன் கொத்துகறி, பனீர் துண்டுகள் சேர்த்து இப்படி பலவிதமான டிஷ் செய்யலாம்
பானிபூரியையும் ,குழம்பும் செய்து வைத்து கொண்டு பரிமாறும் போது கலந்து கொள்ளவும்
மைதா ,பேக்கிங் சோடா, மற்றும் பேக்கிங் பவுடர் ,உப்பு ,உளுந்து பொடி சேர்த்து கலந்து ஜலிக்கவும்
பின் அதில் ரவை சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
பின் சப்பாத்தி மாவு போல் தேய்த்து ரவுண்ட் மூடி அல்லது கட்டர் கொண்டு கட் செய்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
ஒரு மிக்ஸியில் பட்டை கிராம்பு ஏலக்காய் நறுக்கிய பச்சைமிளகாய் புதினா கொத்தமல்லி சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
பின் ஒரு கப் தண்ணீரில் கடலைமாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை சேர்த்து கொடுத்துள்ள தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
பின் அரைத்த பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்
பின் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
பின் கரைத்த மாவை ஊற்றி கலந்து மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
நன்கு கொதித்து கெட்டியாக வரும் போது இறக்கவும்
ஒரு அகலமான பாத்திரத்தில் முதலில் பொரியை சேர்த்து கொள்ளவும்
பின் மிளகாய்த்தூள் பொடியாக நறுக்கிய வெங்காயம் வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு கருப்பு உப்பு லெமன் சாறு கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து கொள்ளவும்
பின் தேவையான அளவு குழம்பை ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்
பரிமாறும் போது நறுக்கிய வெங்காயம் துருவிய கேரட் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
பட்டாணி ஐ முதல் நாள் இரவே ஊற வைத்து பின் அதனை நன்கு கழுவி விட்டு குக்கரில் போட்டு 2 விசில் வந்ததும் இறக்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை வெங்காயம் மிளகாய் தூள் கறிமசால்தூள் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்
பின் சீரகத்தூள் கருப்பு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் பின் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து சுண்ட விடவும்
பின் துருவிய கேரட் துருவிய மாங்காய் சேர்த்து வதக்கவும்
பின் வேகவைத்த பட்டாணி சேர்த்து கலந்து இறக்கவும்
பரிமாறும் போது கொத்தமல்லி தழை வெங்காயம் தூவி பரிமாறவும்
ஒரு அகலமான பாத்திரத்தில் துருவிய முட்டை கோஸ் மற்றும் காளான் சேர்த்து சிறிது உப்பு மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
பின் மைதா மற்றும் கார்ன்ப்ளார் 1/8 கப் சேர்த்து கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பக்கோடா பதத்தில் பிசிறி 1/2 மணி நேரம் ஊற விடவும்
பின் சூடான எண்ணெயில் பக்கோடா வாக உதிர்த்து போட்டு பொரித்து எடுக்கவும்
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
பின் துருவிய கேரட் சேர்த்து வதக்கவும்
பின் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
பின் சோயா சாஸ் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்
பின் பொரித்த காளான் பக்கோடாவை சேர்த்து நன்கு கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைத்து கொதிக்க விடவும்
நன்கு கொதிக்கும் போது ஒரு கப் தண்ணீரில் கார்ன்ப்ளார் மாவை கட்டியில்லாமல் கரைத்து ஊற்றி நன்கு கலந்து மீண்டும் கொதிக்க விடவும்
நன்கு திரண்டு தளதளவென்று வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
பரிமாறும் போது பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறவும்
செஷ்வான் நூடுல்ஸ் செய்முறை:
அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்க விடவும்
பின் நூடுல்ஸை சேர்த்து 2 நிமிடங்கள் வரை வேகவிட்டு வடிகட்டி குளிர்ந்த நீர் விட்டு இரண்டு முறை அலசி பின் தாம்பாளத்தில் பரப்பி ஆறவிடவும்
கொதிக்கும் நீரில் வரமிளகாய் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு பின் நீரை வடிகட்டி வைக்கவும்
பின் அதனுடன் பூண்டு சேர்த்து நன்கு விழுதாக அரைத்து எடுக்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்த மிளகாய் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும்
தீயை குறைத்து வைத்து வதக்கவும்
பின் தக்காளி சாஸ் மற்றும் சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்
பின் நூடுல்ஸை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்
பின் அதை சூடாக பரிமாறவும்
பாதாம் பிசினை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்
அடுப்பில் பாலை வைத்து கொதிக்க விடவும்
கொதி வரும் போது தீயை குறைத்து விட்டு உதிர்த்த கோவா மில்க்மெயின்ட் மற்றும் ப்ரஷ் க்ரீம் சேர்த்து கலந்து சிறிது கொதிக்க விட்டு ஆறியதும் பிரிட்ஜில் வைத்து குளிரவிடவும்
நன்னாரி தண்டை நன்கு தட்டி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
பின் அதை வடிகட்டி வைக்கவும்
வெறும் வாணலியில் சர்க்கரை சேர்த்து உருக்கவும்
சர்க்கரை உருகி தேன் கலர் வந்ததும் நன்னாரி தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு தொடர்ந்து கிளறவும்
நன்கு கரைந்து சிரப் போல் வரும் போது இறக்கி ஆறவைக்கவும்
பரிமாறும் போது முதலில் ஒரு ஸ்பூன் நன்னாரி சிரப் ஊற்றி அதன் மேல் ஊறவைத்த பாதாம் பிசினை போட்டு மீண்டும் சிறிது நன்னாரி சிரப் ஊற்றவும்
பின் குளிரவிட்ட பாலை ஊற்றி மேலே ஐஸ்கிரீம் வைத்து பரிமாறவும்
சப்ஜா விதையை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
அடுப்பில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்
கொதி வரும் போது சிறிது பாலை எடுத்து விட்டு கோவா மில்க்மெயின்ட் மற்றும் ப்ரஷ் க்ரீம் சேர்த்து மெல்லிய தீயில் வைத்து சிறிது கொதிக்க விட்டு இறக்கி ஆறியதும் ரோஸ் வாட்டர் கலந்து பிரிட்ஜில் வைத்து குளிரவிடவும்
பின் சேமியாவை கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து இறக்கி குளிர்ந்த நீர் விட்டு ஒன்றோடொன்று ஒட்டாமல் அலசி வைக்கவும்
எடுத்து வைத்துள்ள பாலில் சிறிது சர்க்கரை கலந்து அதில் சேமியாவை சேர்த்து நன்கு கலந்து அதையும் குளிரவிடவும்
பின் பரிமாறும் போது முதலில் கண்ணாடி டம்ளரில் ரோஸ் சிரப் ஊற்றி பின் நறுக்கிய ஆப்பிள் மற்றும் பொடித்த நட்ஸ்ஐ சேர்க்கவும்
பின் ஊறவைத்த சப்ஜா விதையை சேர்க்கவும்
பின் பாலுடன் கலந்து வைத்துள்ள சேமியாவை சேர்க்கவும்
பின் தேவையான அளவு குளிர்ந்த பாலை சேர்த்து ஐஸ்கிரீம் உடன் பரிமாறவும்
ஒரு பிளன்டரில் காய்ச்சி குளிரவைத்த பாலுடன் ,ரோஸ் வாட்டர், சர்க்கரை ,மற்றும் மில்க்மெயின்ட் ,ரோஸ் சிரப் ,ப்ரஷ் க்ரீம் ,ஐஸ்கிரீம் ,சேர்த்து நன்கு ப்ளன்ட் பன்னி பரிமாறவும்
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க