வீடு / சமையல் குறிப்பு / பாண்டன் இலை-தேங்காய்ப்பால் கடல்பாசி

Photo of Pandan Coconutmilk AgarAgr by Ayesha Ziana at BetterButter
635
3
0.0(0)
0

பாண்டன் இலை-தேங்காய்ப்பால் கடல்பாசி

Oct-31-2017
Ayesha Ziana
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாண்டன் இலை-தேங்காய்ப்பால் கடல்பாசி செய்முறை பற்றி

மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் பிரபலமான ரம்பை இலை-தேங்காய்ப்பால் அகர்அகர் புட்டிங்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தாய்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாண்டன் லேயர் செய்ய: ரம்பை இலை - 1
  2. அகர்அகர் துண்டுகள் 2 1/2 கிராம்
  3. தண்ணீர் - 230 மில்லி மற்றும் அரைக்க
  4. சீனி 1/2 கப்
  5. தேங்காய்ப்பால் லேயர் செய்ய: தேங்காய்ப்பால்(தலை) 75 மில்லி
  6. தேங்காய்ப்பால்(2ஆம்+3ஆம்) 175 மில்லி
  7. அகர்அகர் துண்டுகள் 2 1/2 கிராம்
  8. சீனி 1/2 கப்

வழிமுறைகள்

  1. பாண்டன் லேயர் செய்ய: ரம்பை இலையை வெட்டி மிக்ஸியில் சிறிது தண்ணீர் ஊற்றி மையாக அரைத்து பின்னர் வடிகட்டவும். 1/4 கப் கு சற்று குறைவாக பாண்டன் ஜூஸ் கிடைக்கும்.(ரம்பை இலை பிளேவர் ஸ்ட்ராங்காக விரும்புபவர்கள் மேலும் 1 அல்லது 1.5 இலை ஏற்கலாம்.)
  2. அடுப்பில் 230 மில்லி தண்ணீரைக் கொதிக்க வைத்து, அகர்அகர் துண்டுகள் சேர்த்து விடாமல் கிளறி கொண்டே இருக்கவும். அது நன்றாக கரைந்த பின்னர் சீனி சேர்த்து, அதுவும் கரைந்ததும், பாண்டன் ஜூஸ் சேர்த்து கிளறவும்.
  3. ஓரிரு நிமிடங்கள் கழிந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, மோல்டில் வடிகட்டி ஊற்றவும். சிறிது நேரத்தில் கெட்டியாகி லேயர் அமைந்து விடும்.
  4. தேங்காய்ப்பால் லேயர் செய்ய: தேங்காய்ப்பால்(2ஆம்+3ஆம்) பாலைக் கொதிக்கவைத்து, அகர்அகர் துண்டுகள் சேர்த்து விடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
  5. அகர்அகர் கரைந்ததும், சீனி சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும். சீனி கரைந்ததும் தேங்காய் தலை பால் சேர்த்து சில வினாடிகளில் அடுப்பை அணைத்து விடவும்.
  6. பாண்டன் லேயரின் மேல் வடிகட்டி ஊற்றவும். சிறிது நேரத்தில் தேங்காய்ப்பால் லேயரும் இறுகி விடும்.
  7. பின்னர் தேவைப்பட்டால் சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.மிகவும் சுவையான உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் அகர்அகர் புட்டிங் தயார்.
  8. மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ரம்பை இலையை பல விதமான ரெசிபிகளில் பயன்படுத்துவார்கள். குறிப்பாக ரம்பை இலை-தேங்காய்ப்பால் காம்பினேஷன் வைத்து கேக், புட்டிங், டெசர்ட் எனப் பல வகை ரெசிபிகள் செய்வார்கள், அகர்அகர் புட்டிங் உட்பட. இது வித்தியாசமான சுவை தரும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்