வீடு / சமையல் குறிப்பு / பருப்பு உருண்டை மோர் குழம்பு

Photo of Paruppu Urundai Mor Kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
1612
5
0.0(0)
0

பருப்பு உருண்டை மோர் குழம்பு

Dec-25-2017
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பருப்பு உருண்டை மோர் குழம்பு செய்முறை பற்றி

எப்போதும் பருப்பு உருண்டை புளி குழம்பு செய்வார்கள். வித்யாசமாக பருப்பு உருண்டை மோர் குழம்பு செய்யலாம் . சுவை வேறுவிதமாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பருப்பு உருண்டை செய்வதற்கு தேவையானவை
  2. கடலைப்பருப்பு - 1 / 2 கப்
  3. துவரம்பருப்பு - 1 / 2 கப்
  4. பச்ச மிளகாய் - 1
  5. மிளகாய் வத்தல் - 3
  6. உப்பு - 1 தேக்கரண்டி
  7. பெருங்காயம் - 4 சிட்டிகை
  8. எண்ணெய் - 4 தேக்கரண்டி
  9. கடுகு - 1 தேக்கரண்டி
  10. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  11. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  12. மோர் குழம்பு செய்வதற்கு தேவையானவை
  13. தயிர் - 2 கப் ( சிலும்பல் இல்லாதவாறு கடைந்து கொள்ளவும் )
  14. தேங்காய் துருவல் - 3/4 கப்
  15. பச்ச மிளகாய் - 4
  16. சீரகம் - 1 தேக்கரண்டி
  17. உப்பு - 1 1/2 தேக்கரண்டி
  18. மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
  19. தாளிக்க : கடுகு - 1 தேக்கரண்டி
  20. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  21. மிளகாய் வத்தல் - 1
  22. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  23. பெருங்காயம் - 1 சிட்டிகை
  24. தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
  25. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பருப்பை அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் பச்ச மிளகாய் மிளகாய் வத்தல் உப்பு பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. சிறிது நேரம் ஆறியதும் உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  4. இட்லி தட்டில் வைத்து மூடி ஐந்து முதல் பத்து நிமிடம் வரை வேக விடவும்
  5. வேகவைத்த பின்னர் தனியாக எடுத்து ஆற விடவும்
  6. மிக்ஸியில் தேங்காய் துருவல் பச்ச மிளகாய் சீரகம் சேர்த்து அரைக்கவும்
  7. சிறிது தயிர் சேர்த்து அரைக்கவும்
  8. மீதமுள்ள தயிரில் அரைத்த விழுதை சேர்த்து கலந்து கொள்ளவும்
  9. உப்பு மஞ்சள்பொடி சேர்க்கவும்
  10. ஆறவைத்த உருண்டைகளை மோர் குழம்பில் போட்டு ஒரு கொதி விடவும்
  11. கரண்டியால் மெதுவாக உருண்டைகளை திருப்பி கொடுக்கலாம்
  12. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து சேர்க்கவும். கொத்தமல்லி இலை தூவினால் ருசியான பருப்பு உருண்டை மோர் குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்