வீடு / சமையல் குறிப்பு / யாக்னி புலாவ் ஷாஜஹானி

Photo of Yakhni Pulao Shahjahani by Lubna Karim at BetterButter
3633
140
4.0(0)
0

யாக்னி புலாவ் ஷாஜஹானி

Jul-27-2015
Lubna Karim
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • முகலாய்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கிலோ மட்டன் கறித்துண்டுகள்
  2. 1 கிலோ பாஸ்மதி அரிசி கழுவப்பட்டுத் தண்ணீர் ½ மணி நேரம் ஊறவைக்கப்பட்டது.
  3. 200 கிராம் நெய்
  4. 2 தேக்கரண்டி பாதாம் சாந்து
  5. 200 கிராம் தயிர்
  6. 3 குச்சி இலவங்கப்பட்டை
  7. 2 தேக்கரண்டி மல்லித்தூள்
  8. 2 தேக்கரண்டி கரம் மசாலா
  9. 5 கிராம்பு
  10. 1 தேக்கரண்டி மிளகு
  11. 5 பச்சை ஏலக்காய்
  12. 3 வெங்காயம் பொடியாக நறுக்கப்பட்டது
  13. 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  14. ĵ கிலோ இஞ்சிப்பூண்டு விழுது
  15. தாராளமான 1 சிட்டிகை குங்குமப்பூ
  16. 2 தேக்கரண்டி சூடானப் பால்
  17. 2 தேக்கரண்டி புதிய கொத்துமல்லி நறுக்கப்பட்டது
  18. 1 தேக்கரண்டி புதிய புதினா இலைகள் நறுக்கப்பட்டது
  19. உப்பு

வழிமுறைகள்

  1. சூடானப் பாலில் குங்குமப்பூவை உறவைத்து எடுத்துவைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் பாதாம் சாந்து, தயிர், பாதி இஞ்சிப்பூண்டு விழுது, பாதி மல்லித்தூள், பாதி கரம் மசாலா, உப்பு, மிளகு, நறுக்கப்பட்ட பச்சை மிளகாய்களைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, கறித்துண்டுகளையும் சேர்க்கவும். மசாலாக்களால் நன்றாகப் பூசி மூடி வைக்கவும்.
  3. 6-8 கப் தண்ணீரைக் கொதி நிலைக்குக் கொண்டுவந்து மேலே குறிப்பிட்ட மேரினேட் செய்யப்பட் கறித்துண்டுகளைச் சேர்க்கவும். அவை மிருதுவாக மென்மையாக மாறும்வரை வேகவைக்கவும். மஸ்லின் துணி அல்லது வடிக்கட்டியைப் பயன்படுத்தித் தனியாக கவனமாக வடிக்கட்டிச் சேர்த்து வைக்கவும்.
  4. சேமித்து வைத்ததை தாளிப்பதற்கு:
  5. ஒரு கனமான அடிப்பாகம் உள்ள பாத்திரத்தை எடுத்து, 1 தேக்கரண்டி நெய் சேர்க்கவும், 2 கிராம்பு, மிளகு மற்றும் 3 தேக்கரண்டி பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். வெங்காயம் நன்றாகப் பொன்னிறமாகும்வரை வறுக்கவும். மேலே குறிப்பிட்டப் பொருளில் ஊற்றி 2 நிமிடங்கள் மூடி வைக்கவும். இது ‘யாகினி ’. என்று அழைக்கப்படும்.
  6. மேலே தயாரிக்கப்பட்ட யாக்கினியில் அரைவேக்காட்டு அரிசியை மீதமுள்ள இஞ்சிப்பூண்டு விழுது, உப்பு, கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டையோடு சேர்க்கவும்.
  7. வேறொரு கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தினை எடுத்து அடிப்பாகத்தைத் தாராளமாக நெய் ஊற்றவும். எடுத்து வைத்த கறித்துண்டுகளைச் சேர்த்து கரம் மசாலாவைத் தூவவும். சாதத்தை அதன் மீது வைக்கவும், கறி அடுக்கை மூட பரவச் செய்யவும்.
  8. மீதமுள்ள நெய், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை பாலில் ஊறவைத்தக் குங்குமப்பூவை பாலோடு சேர்க்கவும்.
  9. அதன் மீது சாதத்தை வைக்கவும். கறியை மூட பரவச்செய்யவும். புதிதான நறுக்கப்பட்ட கொத்துமல்லி புதினா இலைகளைப் பரவச் செய்யவும். தம்மில் 20-25 நிமிடங்கள் ஆறவிடவும். ஆறியதும் ரைத்தாவோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்