வீடு / சமையல் குறிப்பு / பீகார் காதி பாடி

Photo of Bihari Kadhi Badi by Jayshree Nishchal at BetterButter
5625
45
4.7(0)
0

பீகார் காதி பாடி

May-05-2016
Jayshree Nishchal
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • பீஹார்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாடிக்கு:
  2. 1 குவியல் கப் கடலைமாவு
  3. மாவு தயாரிக்கத் தண்ணீர்
  4. 1/2 தேக்கரண்டி சீரகம்
  5. 1/4 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  6. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  7. ஒரு சிட்டிகை சமையல் சோடா (விருப்பம் சார்ந்தது)
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. பொரிப்பதற்கு எண்ணெய்
  10. காதிக்கு:
  11. 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய்
  12. ஒரு தாராள சிட்டிகை பெருங்காயம்
  13. 2-3 பிரிஞ்சி இலை
  14. 1 கருப்பு ஏலக்காய்
  15. 5-6 பச்சை ஏலக்காய்
  16. 4 கிராம்பு
  17. 1 இன்ச் இலவங்கப்பட்டை
  18. 2 தேக்கரண்டி சீரகத்தூள்
  19. 2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  20. 3 தேக்கரண்டி கடலை மாவு
  21. 1 கப் உவர்ப்புத் தயிர்
  22. 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  23. தாளிப்புக்கு:
  24. 2 தேக்கரண்டி நெய்
  25. 1 தேக்கரண்டி சீரகம்
  26. 3-4 முழு சிவப்பு மிளகாய்
  27. 1/4 தேக்கரண்டி மிளகாய் விதைகள் அல்லது காஷ்மீர் மிளகாய்த் தூள்

வழிமுறைகள்

  1. பாடியைத் தயாரிப்பதற்கு, கடலை மாவு தண்ணீர் கொண்டு அடர்த்தியான மாவைத் தயாரித்து குறைந்தது 30 நிமிடங்கள் எடுத்து வைக்கவும். ஓய்வுக்குப் பின்னர், மாவை சற்றே பஞ்சுபோல் அடித்துக்கொள்ளவும். (தேவைப்பட்டால் ஒரு சிட்டிகை சோடா மாவு சேர்த்துக்கொள்ளலாம்)
  2. சீரகம், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றை மாவில் சேர்த்துக்கொள்ளவும்.
  3. ஒரு கராத்தியில் (கடாயை) எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க. கடலைமாவு உருண்டைகளை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  4. இப்போது கடாயில் கடுகு எண்ணெயை எடுத்துக்கொள்க. முழு மசாலாவையும் அதனுள் போடவும். அடுப்பை சிறு தீயில் வைத்துக்கொள்க. மல்லி மிளகாய்த் தூளைச் சேர்க்கவும்.
  5. அடுத்து 1-2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பாடியை அல்லது பஜ்ஜியை கொதி நீரில் போடவும். 5-6 நிமிடங்கள் அல்லது பஜ்ஜி மிருதுவாகி உப்பும் வரை கொதிக்கவிடவும்.
  6. இதற்கிடையில், தயிர், கடலைமாவு இரண்டையும் 3-4 கப் தண்ணீரில் கலந்துகொள்க. மஞ்சள் தூளை அதனோடு சேர்த்துக்கொள்க.
  7. பாடி மிருதுவாகத் தோன்றியதும் இந்தக் கலவையை கடாயில் சேர்க்கவும். உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாகக் கொதிக்கவிடவும். பதத்தைச் சரிபார்த்து தேவைப்பட்டால் அதிகமாகத் தண்ணீர் சேர்க்கவும். உப்புக்காரம் சரிபார்க்கவும்.
  8. சரியான பதத்தை 5-6 நிமிடங்களில் காதி அடைந்திருக்கவேண்டும். வெந்ததும் அடுப்பை நிறுத்தவும்.
  9. ஒரு கடாயில் நெய்யைச் சூடுபடுத்திக்கொள்க. சீரகம், முழு சிவப்பு மிளகாய், மிளகாய்த் துண்டுகள் அல்லது தூளைச் சேர்க்கவும். இந்த தாளிப்பை காதியில் சேர்க்கவும்.
  10. ஆவிபறக்கும் சாதத்தோடு பரிமாறுக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்