யாருக்கு வேண்டுமானால் கூட கால் வீக்கம் ஏற்படும். ஏதேனும் தீவிர வியாதி இருந்தால் மட்டுமல்ல, சரியான ரத்த சுழற்சியின்மை, மாதவிலக்குக்கு முந்தைய நாட்கள், கர்ப்பகாலம், நீண்ட நேரத்திற்கு நிற்குதல் அல்லது உட்காருதல், சத்து குறைபாடு, முதுமை, அதீத உடல் எடை அல்லது சரியான உடற்பயிற்சி இல்லாவிட்டால் கூட கால் வீக்கம் ஏற்படும். நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கல்லீரல், இதய நோய் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ, அதிக அக்கறை எடுத்து கொள்ளவேண்டும். ஏனென்றால் இந்த பிரச்சினை உங்களுக்கு வர அதிக வாய்ப்பு இருக்கிறது.
கால் வீக்கத்திற்கு ஏற்ற வீட்டு நிவாரண முறைகளை விரைவாக பார்க்கலாம்.
1.வெள்ளரி
வெள்ளரியில் உள்ள அழற்சியைத் தடுக்கும் குணம் உடலில் உள்ள அதிக நீரை வெளியேற்ற உதவும். அதனால் நீர்க்கட்டு மற்றும் வீக்கம் ஆகியவை குறையும்.
செய்முறை –
- வெள்ளரியை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
- வீக்கம் அடைந்த காலில் வைத்து துணியைச் சுற்றி கட்டவும்.
- அப்படியே 20 முதல் 30 நிமிடம் வரை வைத்திருந்த பிறகு கழற்றினால், வித்தியாசம் தெரியும்.
2.கொத்தமல்லி
கொத்தமல்லியில் நீரைப் பிரிக்கும் தன்மை உள்ளது. உடலில் உள்ள தேவை இல்லாத நீரை அகற்றி கால் வீக்கத்தை வற்ற வைக்கும்.
செய்முறை –
- கொத்தமல்லி விதைகளை தண்ணீருடன் பாதி அளவு வரும் வரை கொதிக்க விடவும்.
- ஆறவைத்து தினமும் இரண்டு முறை இந்த நீரைப் பருகவும்.
3.பார்லி
இதன் சுவை நன்றாக இல்லையென்றாலும், இதன் கலவை நீரைப் பிரிக்கும் சக்தி கொண்டது. நீர் தங்குவதன் மூலம் உடலில் தங்கும் நச்சுப் பொருட்களை அகற்றி, காலில் உள்ள அழற்சியை அகற்றும்.
செய்முறை –
- ஒரு கப் பார்லியை வெளிர் மஞ்சள் நிறம் வரும் வரை தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும்.
- ஆறவைத்து அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்து அருந்தவும்.
4.முட்டைகோஸ்
முட்டைகோஸிற்கு இயற்கையாகவே உடலில் உள்ள நீரை உரியும் தன்மை உண்டு. அழற்சியைத் தவிர்க்கும் குணமும் உண்டு. எனவே முட்டைகோஸ் உண்டால், அது உங்கள் உடலில் உள்ள உபரி நீரைக் குறைத்து கால் வீக்கத்தையும் குறைக்கும்.
செய்முறை –
- முட்டைகோஸ் இலைகளைக் கழுவாமல் சுத்தம் செய்யவும். குளிசாதன பெட்டியில் வைத்து உபயோகித்தால் இன்னமும் நன்று. ஆனால் உறைந்த நிலையில் உபயோகிக்க வேண்டாம்.
- வீக்கமடைந்த காலில் அந்த இலையை வைத்து கட்டி விடவும்.
- 30 நிமிடம் கழித்து இலையை எடுக்கவும்.
5.இந்துப்பு
வீக்கம் குறைவதற்கு இந்துப்பு ஒரு மிக சிறந்த தீர்வு. இதனுள் உள்ள மெக்னீசியம் சல்பேட் தோலினால் எளிதில் உறியப்பட்டு வீக்கம் அடைந்த காலைக் குணப்படுத்த உதவும்.
செய்முறை –
- ஒரு சிறு தொட்டியில் தண்ணீர் நிரப்பி அதில் அரை மேசைக்கரண்டி இந்துப்பைப் போடவும்.
- வீங்கின காலை அதனுள் வைத்து 10-15 நிமிடங்கள் விடவும்.
6.சமையல் சோடா
வீக்கம் அடைந்த காலிற்கு இது ஒரு நல்ல மருந்து. இதற்கு அழற்சியைத் தவிர்க்கும் குணம் உண்டு. அரிசி கஞ்சியுடன் சமையல் சோடாவும் இனைந்து தேவையற்ற தண்ணீரை உடலை விட்டு அகற்றி வீக்கம் அடைந்த காலை குணப் படுத்துகின்றன.
செய்முறை –
- சாதம் வெந்த உடன் கஞ்சியை வடிக்கவும்.
- சமையல் சோடாவுடன் கலைக்கவும்.
- வீங்கின காலின் மேல் இந்த கலவையைப் பூசி 10-15 கழித்து கழுவவும்.
7.எலுமிச்சை சாறு
அழற்சி ஏற்படுத்தும் பொருட்களைக் கொண்டுள்ள மற்றொன்று எலுமிச்சை ஆகும். இது நச்சுப் பொருட்கள் மற்றும் அதிக நீரை உடலை விட்டு வெளியேற்றி விடும். காலின் வீக்கத்தை மட்டும் அல்லது உடலில் வேறு எந்த பாகத்தில் அழற்சி இருந்தாலும் இது தீர்க்க வல்லது.
செய்முறை –
- வெது வெதுப்பான நீரில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாரைக் கலக்கவும்.
- இனிப்பு சுவைக்காக தேனைச் சேர்க்கவும்.
- இந்த சாறை தினமும் இருமுறை அருந்தவும்.
8.பனிக்கட்டி கட்டு
பனிக்கட்டியின் குளிர்ந்த வெப்பநிலையாவது உடலின் ரத்த ஓட்டத்தை மாற்றி, உடலில் உள்ள வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றது. இதனால் வீக்கமடைந்து காலைக் குணப்படுத்த இது ஒரு சிறந்த வீட்டு வழிமுறை ஆகும்.
செய்முறை –
- வீக்கம் அடைந்த காலின் மேல் 10-12 நிமிடத்திற்கு பனிக்கட்டி கட்டு கட்டவும்.
- உங்களிடம் பனிக்கட்டி கட்டு இல்லாவிடில், ஒரு துண்டில் சில பனிக்கட்டிகள் வைத்து அதை வீக்கத்தில் கட்டவும்.
பட மூலம் : ஹோம்ரெமடிபைண்ட், ஹோம்டியரெஸ்ட், டெஸ்க்டாப்பாக்கிரௌண்ட், லைப்எல்த்.காம், ட்ரீம்ஸ்டைம்.காம், இல்கீஸீம், முல்தானிமிட்டிமிரக்ள்.காம், கிலிஃஸ் நோட்ஸ் பீர் கைட்.