முதலில் மேற்சொன்ன பொருட்கள் சேர்த்து மாவை பிணைந்து ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.ஒரு மணி நேரமாவது இருக்க வேண்டும்.
அடுத்து கறியை அலசி தண்ணீர் வடித்து குக்கரில் போட்டு,கறிமசாலா 2 தேக்கரண்டி ,கரம் மசாலா 1/4 தேக்கரண்டி,தயிர்,இஞ்சி பூண்டு விழுது,உப்பு சேர்த்து கலந்து 3 விசில் விட்டு வேக வைக்கவும்.
வெந்த கறியில் தண்ணீர் இருந்தால் வற்ற வைக்கவும்.
இனி உள்ளடக்கம் செய்ய வெங்காயம்,மிளகாய் நறுக்கவும்.
கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் சூடு செய்து வெங்காயம் பச்சை மிளகாய் வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி சேர்த்து மீண்டும் வதக்கவும்.
தக்காளி ஒன்று நறுக்கி சேர்க்கவும். சுவைக்கு உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து,மிளகாய்த்தூள்,சீரகத்தூள்,சோம்புத்தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கரம் மசாலா சேர்க்கவும்.
வேகவைத்த கறி சேர்க்கவும்.
நன்கு ஒரு சேர பிரட்டி சிறிது வேக விடவும்.
பொடியாக நறுக்கிய மல்லி,புதினா சேர்க்கவும். பிரட்டி ஆற வைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
மாவை 10-12 உருண்டைகளாக பிரிக்கவும்.
ஒரு உருண்டையை எடுத்து எண்ணெய் தடவி மெலிதாக பரத்தவும்.முட்டையை உப்பு மிளகு போட்டு அடித்து வைக்கவும்.
பரத்திய மாவில் முதலில் முட்டை கரைசல் மூன்று தேக்கரண்டி பரவலாக விட்டு 2 மேஜைக்கரண்டி கொத்துக்கறி மசாலா வைக்கவும்.
இரண்டு பக்கமும் பக்கவாட்டில் மடக்கி,மேலும் கீழும் மடக்கி வைக்கவும்.
இனி தவாவை எண்ணெய் நெய் கலந்து விட்டு சூடு செய்யவும் .தயார் செய்த முர்தபா வை போடவும்.
தவா அளவைப் பொருத்து இரண்டாகவோ மூன்றாகவோ போட்டு மேலும் கீழும் பொன் முறுகலாக எண்ணெய் நெய் தடவி சுட்டு எடுக்கவும்.
லாப்ப / முர்தபா தயார் ஆகி விட்டது.
தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை.அப்படியே பரிமாறலாம். சுவையான லாப்ப தயார்.
How would you rate this recipe? Please add a star rating before submitting your review.
Submit Review