முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து கழுவி சிவப்பு மிளகாய் தூள், சீரக தூள்,மஞ்சள் தூள்,மல்லி தூள்,தந்துரி மசாலா தூள்,தயிர்,உப்பு,இஞ்சி பூண்டு விழுது, லெமன் ஜூஸ் சேர்க்கவும்.
பின் அதை நன்கு கிளறி 5 முதல் 8 மணி நேரம் வரை ஊற வைக்கவும்
பின் அவனில் 200 டிகிரி ஃபாரன்ஹீட்டில் 40 நிமிடம் வைக்கவும்
பின் சிக்கனை திருப்பி லேசாக எண்ணெய் விட்டு 40 நிமிடம் மறுபடியும் வைக்கவும்
சிக்கன அவனில் வேகும் நேரத்தில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொரித்து எடுக்கவும்
அரை கிலோ அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்
பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
பின் பொரித்த வெங்காயத்தை முக்கால் வாசி ஒரு டிஷ்யூ பேப்பரில் எடுத்து வைக்கவும்
பின் அதே கடாயில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
இஞ்சி பூண்டு வதங்கியதும் தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
பின் பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
பின்பு தந்தூரி மசாலா, பிரியாணி மசாலா, சிவப்பு மிளகாய் தூள்,மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்
அவனில் இருக்கும் தந்தூரியை அதில் சேர்த்து கிளறி விடவும்
முன்னும் பின்னுமாக பிரட்டி 10 நிமிடம் மூடி போட்டு, எண்ணெய் விடும் வரை வேகா விடவும்
இந்த நேரத்தில் தண்ணீரில் பட்டை, லவங்கம், ஏலக்காய் பிரிஞ்சி இலை, புதினா கொத்தமல்லி, சேர்த்து கொதிக்க விடவும்
அரிசியை அதில் சேர்த்து வேகவிடவும்.தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும்.
முக்கால் பாகம் வெந்தவுடன் வடிக்கவும்
பின் ஒரு பெரிய கனத்த பாத்திரத்தில் சோற்றை ஒரு லேயராக சேர்க்கவும்
அதில் மேல் தந்தூரி மற்றும் கிரேவியை சேர்க்கவும்
பின் அதில் பொரித்த வெங்காயம், புதினா, கொத்தமல்லி மற்றும் நெய் மற்றும் கலர் தண்ணீர்(கலர் பொடி மற்றும் லெமன் ஜூஸ்) சேர்க்கவும்
பின் மறுபடியும் சோற்றை சேர்க்கவும்
பின் அதன் மேல் சுற்றி பொரித்த வெங்காயம், பொடியாக நறுக்கிய புதினா ,கொத்தமல்லி மற்றும் நெய் சேர்க்கவும்.
கடைசியில் சிறிது பாலில் குங்குமப்பூவை கலந்து சுற்றி ஊற்றி விடவும்.
ஒரு தவாவை அடுப்பில் வைத்து 20 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்
சுவையான லேயர் தந்தூரி சிக்கன் பிரியாணி தயார்
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க