வீடு / சமையல் குறிப்பு / காரைக்குடி செட்டிநாடு கோழிக்குழம்பு

Photo of karaikkudi chettinadu chicken kuzhambu by Apsara Fareej at BetterButter
614
1
0.0(0)
0

காரைக்குடி செட்டிநாடு கோழிக்குழம்பு

Sep-30-2018
Apsara Fareej
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

காரைக்குடி செட்டிநாடு கோழிக்குழம்பு செய்முறை பற்றி

காரைக்குடி என்றாலே செட்டிநாடு வகைகளில் நிறைய உணவுகள் மிகவும் பிரபலம். அதில் இந்த குழம்பு வகை அவர்களிடையே இன்றும் வழக்கத்தில் உள்ள செய்முறை தான் இந்த கோழி குழம்பு.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. கோழி ( நாட்டு கோழி இன்னும் சிறப்பு) - 1 கிலோ
  2. பெரிய வெங்காயம் - 1
  3. தக்காளி - 2
  4. மல்லித்தழை - சிறிதளவு
  5. தாளிக்க :-)
  6. நல்லெண்ணெய் - 150 மிலி
  7. கடுகு - 1/2 தேக்கரண்டி
  8. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  9. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
  10. பிரிஞ்சி இலை - 1
  11. மிளகாய்தூள் - 1 மேஜைக்கரண்டி
  12. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
  13. வதக்கி அரைக்க :-)
  14. சின்ன வெங்காயம் - 200 கிராம்
  15. பச்சைமிளகாய் - 3
  16. காய்ந்த மிளகாய் - 3
  17. இஞ்சி - 1 விரல் அளவு
  18. பூண்டு - 10 பல்
  19. கறிவேப்பிலை - 2 கொத்து
  20. தேங்காய் துருவல் - 1/4 கப்
  21. மிளகு - 1 1/2 மேஜைக்கரண்டி
  22. சீரகம் - 1 மேஜைக்கரண்டி
  23. சோம்பு - 1 தேக்கரண்டி
  24. பட்டை - 1 சுண்டு விரல் அளவு
  25. கிராம்பு - 3
  26. ஏலக்காய் - 2
  27. நல்லெண்ணெய் - 100 மிலி
  28. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் தேவையான பொருட்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும். கோழியை கழுவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம் தக்களியை அரிந்து வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு அகன்ற வானலியில் எண்ணெய் ஊற்றி முதலில் சீரகம் போட்டு பொறிந்ததும் சின்ன வெங்காயத்தை சேர்க்க வேண்டும். அது ஒரு நிமிடம் வதங்கியதும், இஞ்சி பூண்டை நறுக்கி சேர்த்து வதக்கவும், அதன்பின் மிளகு, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தேங்காய் துருவல், மிள்காய்கள் எல்லாம்சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பின்பு மல்லித்தூள் , கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு இறக்கி வைத்து ஆற விடவும்.
  3. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கடுகு போடவும். அது வெடித்து கொண்டிருக்கும் போதே பிரிஞ்சி இலை, சீரகம் , வெந்தயம் போட்டு தீய விடாமல் லேசாக பொரிந்ததுமே அரிந்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு அது மசிய வதக்க வேண்டும்.
  5. பிறகு மஞ்சள் மற்றும் மிளகாய் தூள்களை சேர்த்து கிளறி விட்டு, கோழியையும் இரண்டு தேக்கரண்டி உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு குறைந்த தீயில் சிறிது நேரம் வதங்க விடவும்.
  6. அதற்குள் வதக்கிய பொருட்களை மிக்ஸியில் நன்கு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.
  7. அடுத்து வதங்கிய சிக்கன் கலவையில் அரைத்ததை ஊற்றி தாராளமாக தண்ணீர் ஊற்றி உப்பு சரிப்பார்த்துவிட்டு மல்லிதழை தூவி மூடி விட்டு, ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் ஐந்து நிமிடம் வைத்து இறக்கி விடவும்.
  8. ஸ்டீம் விட்டதும் குக்கரை திறந்து பார்த்தால், கமகமக்கும் காரைக்குடி கைமணம் கோழி குழம்பு தயார்.
  9. நமக்கு கொஞ்சம் தண்ணி மாதிரி வேண்டுமெனில் அதற்கேற்றார் போல் தண்ணீர் சேர்க்க வேண்டும். அதே போல் எண்ணெயும் விருப்பத்திற்கு தகுந்தார் போல் இன்னும் கூட சேர்த்து கொள்ளலாம். இது சாதம் , பரோட்டா, சப்பாத்தி, இட்லி , தோசை , ஆப்பம், இடியாப்பமென அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்