வீடு / சமையல் குறிப்பு / நீலகிரி கீரின் குருமா

Photo of Nilgiri green kurma by Umamaheswari Chellamuthu at BetterButter
395
2
0.0(0)
0

நீலகிரி கீரின் குருமா

Oct-02-2018
Umamaheswari Chellamuthu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நீலகிரி கீரின் குருமா செய்முறை பற்றி

நீலகிரி மாவட்டம் பசுமை போர்த்திய மலைகளுக்கு பெயர் போனது .இந்த குருமாவும் நீலகிரி பகுதிகளில் விளையும் காய்கறிகள் கொண்டு செய்ய படுவது . இதன் நிறமும் நீலகிரியின் பசுமையை நினைவு படுத்துவதால் இப்பெயர் அமைய பெற்று இருக்கலாம் .பொதுவாக நீலகிரி பகுதிகளில் செய்ய கூடியது . அபார மணம் நிறைந்தது . காய்கறிகள் கொண்டும் இதை செய்யலாம்.சிக்கனிலும் இதை செய்யலாம் . இட்லி ,தோசை ,சப்பாத்தி ,பூரி போன்ற உணவு வகைகளுக்கும் ,தேங்காய் சாதம் ,ஜீரா ரைஸ் இவற்றிக்கும் மிக பொருத்தமாய் இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காய்கறிகள் ( காரட் ,பீன்ஸ் ,உருளை கிழங்கு ,டர்னிப் ,காலி பிளவர் ,பட்டாணி )-தலா 1 கப்
  2. மீல் மேக்கர் -1/4 கப் (தேவைப்பட்டால்)
  3. பட்டை- 1 துண்டு ,கிராம்பு ,ஏலக்காய் -தலா 2
  4. சின்ன வெங்காயம் -1 கப்
  5. இஞ்சி- 1 துண்டு
  6. பூண்டு – 10 பற்கள்
  7. தேங்காய் துருவல் – 5 அல்லது 6 மேஜை கரண்டி
  8. கசகசா – 1 மேஜை கரண்டி
  9. முந்திரி பருப்பு -5 அல்லது 6 ( தேவை பட்டால் )
  10. மல்லி தழை- ஒரு கைப்பிடி புதினா – ஒரு கைப்பிடி
  11. பச்சை மிளகாய் – 4 அல்லது 5
  12. மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
  13. எலுமிச்சை பழம் - 1/2 மூடி
  14. உப்பு -தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் ,அதில் பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் இவற்றை போட்டு பொரிய விடவும் .அதில் இஞ்சி ,பூண்டு ,முழு சின்ன வெங்காயம் இவற்றை போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும் .
  2. அதனுடன் பச்சை மிளகாய் ,புதினா , மல்லித்தழை இவற்றையும் சேர்த்து நன்கு வதக்கி இந்த கலவையை ஆற விடவும் .
  3. ஆறிய இந்த கலவையை மிக்ஸ்யில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும் .
  4. அதே பாத்திரத்தில் மேல குறிப்பிட்டுள்ள நன்கு கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு நன்கு வதக்கி இவற்றுடன் உப்பு , ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் . சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி போட்டு நன்கு வேக விடவும் . காய்கறிகள் நன்கு வெந்ததும் ,அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து ,தேவையான அளவு தண்ணீர் விட்டு பச்சை வாசனை நீங்கும் வரை மிதமான சூட்டில் காய் கறிகளை மசாலாவுடன் நன்கு வேக விடவும்.
  5. நன்கு வெந்தவுடன் அதில் தேங்காய் , கசகசா ( , தேவைப்பட்டால் )முந்திரி பருப்பு இவற்றை சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து அந்த கலவையை வெந்த காய்கறி மசாலாவுடன் கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி எலுமிச்சம் பழ சாறு பிழிந்து ,புதினா , மல்லித்தழை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்