உளுந்து கீர் , பப்படம், பருப்பு பொடி தவிர மற்ற தேவையான பருப்பு பயறை ஊறவைக்கவும். காராமணி (வடைக்கு தேவையானது தவிர), பச்ச பயறு, கொண்டகடலை (ஊறுகாய்க்குள்ள கடலை தவிர) , ராஜ்மா, மொச்சை கொள்ளு, பச்சடிக்கான கடலைப்பருப்பு குக்கரில் வேகவைத்து எடுக்கவும்.
பாஸ்மதி அரிசியை (தனியாக கொடுத்த பாஸ்மதி அரிசி மற்றும் ராஜ்மா மசாலா பாத்திற்கு கொடுத்த அரிசியும் சேர்த்து) களைந்து ஊறவைத்து அளவாக தண்ணீர் விட்டு வேகவைத்து எடுக்கவும்
பருப்புப்பொடிக்கு கொடுத்தவற்றைவெறும் கடாயில் வறுத்து உப்பு சேர்த்து திரித்துக்கொள்ளவும்
தீயலுக்கு வறுக்க கொடுத்தவற்றை வறுத்துக்கொள்ளவும்
ராஜ்மா மசாலா பாத்தில் வறுக்க கொடுத்தவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும்
தக்காளியை வதக்கி தீயலுக்கு வறுத்ததுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து புளிகரைத்து விட்டு உப்பு மஞ்சள் பொடி வெல்லம் அரைத்த விழுது வேகவைத்த கொண்டகடலை சேர்த்து நன்றாக கொதிவிட்டு கெட்டியானதும் இறக்கினால் கொண்டகடலை தீயல் தயார்
பப்படத்திற்கு கொடுத்த உளுந்தை மிக்ஸியில் திரித்து அரிப்பில் அரித்துக்கொள்ளவும்
அதோடு கொடுக்கப்பட்ட மற்ற பொருட்களையும் தண்ணீர் சேர்த்து மாவு போல் பிசைந்து சப்பாத்தியாக இட்டு கொள்ளவும். வெயிலில் காயவைக்க வேண்டாம். தாலி அரேஞ்ச் செய்யும் முன் இந்த அப்பளத்தை பொரிக்கவோ தணலில் சுடவோ அல்லது மைக்ரோவேவ் அவனில் 30 வினாடிகள் வைத்து எடுத்தால் அப்பளம் தயார்.
பருப்பு உருண்டை ரசத்தில் அரைக்க கொடுத்தவற்றை ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும்
அரைத்த விழுதை உருண்டையாக உருட்டி ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்
புளியை கரைத்து விட்டு தக்காளி உப்பு மஞ்சள் பொடி பெருங்காயம் சேர்த்து கொதிக்கவிட்டு வேகவைத்த பருப்பு உருண்டையை சேர்த்து நுரைத்து வரும்போது இறக்கி தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்து கொத்தமல்லி இலையை தூவினால் பருப்பு உருண்டை ரசம் தயார்
சப்பாத்திக்கு கொடுத்த காராமணியை ஊறவைத்து வேகவைத்து எடுத்து அதோடு பச்ச மிளகாய் உப்பு பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்
அரைத்ததுடன் கோதுமைமாவு கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து சப்பாத்தியாக இட்டு தோசைகல்லில் எண்ணெய் அல்லது நெய் விட்டு வாட்டி எடுக்கவும். காராமணி சப்பாத்தி/பராத்தா தயார்
காராமணி/தட்டபயறு வடைக்கு ஊறவைத்ததை பச்ச மிளகாய் மிளகாய் வத்தல் உப்பு பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக தண்ணீர் விடாமல் அரைக்கவும்
அதோடு நறுக்கிய குடைமிளகாய் கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து கலந்து வடையாக தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். காராமணி குடமிளகாய் வடை தயார்
பச்சபயறு பூரண அப்பத்தில் கொடுக்கப்பட்ட பச்ச பயிறை வேகவைத்து தண்ணீர் வடித்து விட்டு அதோடு தேங்காய் துருவல் வெல்லம் ஏலப்பொடி சேர்த்து மிக்ஸியில் அரைத்து நெய் சேர்த்து உருண்டையாக உருட்டிக்கொள்ளவும்
மேல்மாவிற்கு கொடுத்த அரிசி உளுந்தை ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்து கலந்து செய்து வைத்த பச்ச பயறு பூரணத்தை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
குணுக்கு மோர்குழம்பில் கொடுக்கப்பட்ட அரிசி உளுந்தை ஊறவைத்து அரைத்து கருவேப்பிலை பச்ச மிளகாய் உப்பு மிளகு சீரகம் சேர்த்துக் கலந்து சிறுசிறு போண்டா போல போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
குணுக்கு மோர்குழம்பில் அரைக்க கொடுத்தவற்றை அரைத்து தயிரில் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து செய்து வைத்த தயிர் கலவையை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி பரிமாறும் முன் செய்துவைத்த குணுக்கு சேர்த்தால் குணுக்கு மோர்குழம்பு தயார்
மொச்சை கத்திரிக்காய் துவரனில் அரைக்க கொடுத்தவற்றை அரைக்கவும். மொச்சையை ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும்
கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கத்திரிக்காய் மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். வேகவைத்த மொச்சை அரைத்த விழுது உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் மொச்சை கத்திரிக்காய் துவரன் தாயார்
ராஜ்மா சூப்பில் கொடுத்த ராஜ்மாவை ஊறவைத்து வேகவைத்து அரைத்துக்கொள்ளவும்
கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து தக்காளி அரைத்த ராஜ்மா உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி கொத்தமல்லி இலையை தூவினால் ராஜ்மா சூப் தயார்
உளுந்து கீரில் கொடுத்த உருட்டு உளுந்தை நெய் விட்டு நன்றாக வறுக்கவும்
அதில் பால் விட்டு வேகவிட்டு உளுந்து நன்றாக வெந்ததும் பனங்கற்கண்டு ஏலப்பொடி சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி பாதாம் துருவல் சேரத்தால் உளுந்து கீர் தயார்
கடலைப்பருப்பு பச்சடியில் கொடுத்த கடலைப்பருப்பை ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும் கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வேகவைத்த கடலைப்பருப்பு சேர்த்து வதக்கி உப்பு காரப்பொடி ஆம்சூர் பொடி வெல்லம் சேர்த்து கிளறி இறக்கினால் கடலைப்பருப்பு பச்சடி ரெடி
கொள்ளு பாலக் கிரேவியில் கொடுத்த கொள்ளை ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும். கீரையை தண்ணீர் விட்டு வேகவைத்துக்கொள்ளவும். கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து இஞ்சி பச்ச மிளகாய் தக்காளியை வதக்கி வேகவைத்த கொள்ளு கீரை உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி கொத்தமல்லி இலையை தூவினால் கொள்ளு பாலக் கிரேவி தயார்
ராஜ்மா மசாலா பாத்தில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து தக்காளி குடமிளகாய் சேர்த்து வதக்கி வேகவைத்த ராஜ்மா , ஏற்கனவே வறுத்து திரித்த பொடி உப்பு சேர்த்து கிளறவும்
சாதம் சேர்த்து கிளறினால் ராஜ்மா மசாலா பாத் தயார்
கோஸம்பரிக்கு கொடுத்த பாசிப்பருப்பை ஊறவைத்து தண்ணீர் வடித்து அதோடு கொடுக்கப்பட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து கலந்தால் கோஸம்பரி தயார்
தேங்காய் துருவலில் தண்ணீர் விட்டு முறையே முதல் மற்றும் இரண்டு பால் எடுக்கவும். பச்ச பயிறை ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும்
கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து குடமிளகாய் பச்ச மிளகாய் வேகவைத்த பச்ச பயறு இரண்டாம் பால் சேர்த்து வேகவிடவும். உப்பு மற்றும் முதல் பால் சேர்த்து இறக்கவும். பச்ச பயறு குடமிளகாய் ஸ்டூ தயார்
ராஜ்மா காலிபிளவர் சப்ஜியில் கொடுத்த ராஜ்மாவை ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும். காலிபிளவரை கொதிக்கும் வெந்நீரில் மஞ்சள் பொடி சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வேகவைத்த ராஜ்மா காலிபிளவர் உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து கிளறி கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் ராஜ்மா காலிபிளவர் சப்ஜி தயார்
கொண்டகடலையை ஊறவைத்து தண்ணீர் வடித்து வெயிலில் மூன்று நாட்கள் காயவைத்து ஈரமில்லாமல் எடுக்கவும். அதோடு நறுக்கிய மாங்காய் துண்டுகள் உப்பு சேர்த்து ஊறவிடவும். கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்க்கவும். இரண்டு மூன்று நாட்கள் ஊறியபின் அருமையான சுவையுடன் கூடிய கொண்ட கடலை மாங்காய் ஊறுகாய் தயார்.
செய்து வைத்த எல்லாவற்றையும் சாதம் நெய் தயிர் உடன் பரிமாறவும்
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க