வீடு / சமையல் குறிப்பு / வெள்ளை காய்கறி குருமா......
தேவையான காய்கறிகள் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்..காய்கறிகளை பொடியாக நறுக்கி குக்கரில் போட்டு தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி 4விசில் வைக்கவும்...1சில் தேங்காய் பொடியாக நறுக்கி கொள்ளவும், 1 பெரிய வெங்காயம் தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும்,2 பச்சை மிளகாய் நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும், 1 மேஜைக்கரண்டி பெருஞ்சீரகம்,1 மேஜைக்கரண்டி தனியா எடுத்து கொள்ளவும்,3 பல் பூண்டு,சிறிதளவு இஞ்சி,20முந்திரி பருப்பு எடுத்து கொள்ளவும்..மேலே குறிப்பிட்ட பொருள்களுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மை போல் அரைத்து எடுத்து கொள்ளவும்..கடாயில் 2தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் 4 ஏலக்காய் சிறிதளவு பட்டை சிறிதளவு பிரியாணி இலை போட்டு வதக்கவும்... அரைத்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும்.... பிறகு 2நிமிடம் கொதிக்க வைக்கவும்...கொதி வந்ததும் வேகவைத்துள்ள காய்கறிகளை போட்டு நன்றாக கிளறி விடவும்,10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும்..நன்றாக நுரை கட்டி வந்ததும் கொத்தமல்லி இலையை போட்டு இறக்கவும்...இப்போது ருசியான வெள்ளை காய்கறி குருமா ரெடி.....
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க