தேவையான பொருட்கள்
முதலில் இறாலை சுத்தம் செய்து நன்கு கழுவி வைத்துக்கொள்ளவும்.பின்பு அதனுடன் 1 பொடியாக நறுக்கிய வெங்காயம் ,1 பச்சை மிளகாய் ,1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது ,1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்,1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்,1/2 தேக்கரண்டி கரம்மசாலா ,மல்லி இலை சிறிதளவு ,உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும் .தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
இப்பொழுது அரைத்த விழுதுடன் ஒரு முட்டை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.அரைத்த கலவை கெட்டியாக இல்லாமல் இருந்தால் சிறிதளவு கார்ன் பிளார் அல்லது ஒரு வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து பிசைந்து கொள்ளவும் .
இப்பொழுது கோஃப்தா செய்ய அரைத்த இறால் தயார்.
அடிப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அரைத்த இறால் விழுவதை சிறு சிறு உருண்டையாக உருட்டி எண்ணெயில் சாலோ ப்ரையாக பொரிக்கவும்
இரண்டுபக்கமும் நன்கு வேகவைத்து எண்ணெயில் இருந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் ,எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம் ,பட்டை,ஏலக்காய் ,கிராம்பு,பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
இப்பொழுது இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும் .
பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும் .தக்காளி நன்கு வதங்கியதும் ,1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்,1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி மல்லி தூள்,1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்,1/2 தேக்கரண்டி சீரகம் தூள் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கி வதக்கவும்.
மசாலா நன்கு தக்காளியுடன் வதங்கியதும் 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து வதக்கவும்.
தேங்காய் துண்டுகளை மிக்சியில் அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்.இப்பொழுது தேங்காய் பாலினை மசாலாவுடன் சேர்க்கவும்.
பின்பு தேவையான அளவு தண்ணீர் ,உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்து வந்ததும் பொரித்து வைத்துள்ள இறால் கோஃப்தா உருண்டைகளை சேர்க்கவும்.
உருண்டைகளை சேர்த்து 7-10 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைத்து இறுதியாக மல்லி இலை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
சுவையான இறால் கோஃப்தா குழம்பு தயார். புலாவ், தேங்காய் பால் சாதத்திற்கு அருமையாக இருக்கும் .
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க