Home / Uncategorized / மூல நோய்க்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:
ஹெமராய்ட்ஸ் என்று அறியப்படும் மூலம் ஆசனவாயில் காணப்படும் ஒரு சிறிய சதை அல்லது திசு ஆகும். அவை முறையான குடல் இயக்கத்திற்கு உதவுகின்றன. ஹெமராய்ட்ஸ் அதிகபடியாக வீக்கமடையும் சமயம், இரத்த நாளங்கள் பெரிதாகும் பொழுதும் வலி உண்டாகி, இரத்தப் போக்கு, அரிப்பு, உறுப்பு வெளியே தள்ளப்படுதல் போன்ற நிலைகள் உருவாகின்றன. இந்த நிலை ஹெமராய்டல் நோய் அறிகுறிகளால் ஏற்படும் நோய்த்தாக்கம் எனப்படுகிறது. இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ எழுபது சதவிகிதம் மக்களுக்கு மூல நோய் பாதிப்பு இருக்கிறது. பெரும்பாலோருக்கு மூல நோய் தாக்கம் சிறு அளவில் இருப்பதால், அதற்கான எந்த அறிகுறியும் தெரிவதில்லை. இந்த காரணத்தினால் தான் மக்களுக்கு தாங்கள் மூல நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிய முடிவதில்லை.
மூல நோய்க்கான சரியான காரணங்கள் கண்டறியப்படவில்லை என்றாலும், அதிகமான அழுத்தத்தை வயிற்று பகுதிக்கு கொடுப்பதே இந்நோய்க்கான காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கீழே கூறப்படும் காரணங்களால் அழுத்தம் உண்டாகலாம்:
இவையெல்லாம் மூல நோய்க்கான பொதுவான அறிகுறிகளாக இருந்தாலும், குடும்பத்தில் யாருக்காவது இந்நோய் இருந்தாலோ அல்லது மரபு வழியாகவோ ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
மூல நோய்க்கான பொதுவான அறிகுறிகள் இவையாகும்:
கடுமையான தாக்கம் உள்ளவர்களுக்கான அறிகுறிகள்
மூல நோயை தானாகவே வீட்டு சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் போன்றவற்றின் வழியாக தீர்க்க முடியும். முக்கியமாக ஒருவர் தன வாழ்வில் அறிமுகப்படுத்த வேண்டிய மாற்றங்கள்:
1)உங்கள் உணவில் நார்ச்சத்து அதிகமுள்ள பதார்த்தங்களை சேர்க்கவும்.
2)கழிப்பறைக்கு செல்லும் நேரத்தை நீடிக்காமல் இருப்பது.
3)எடையை குறைத்தல்
4)அதிகப்படியான மசாலா உணவை தவிர்த்தல்
மேற்கூறிய மாற்றங்களை கடைப்பிடித்த பின்னரும், ஆசன வாயில் வலி, இரத்தப்போக்கு குறையவில்லை என்றால், கண்டிப்பாக மருத்துவரை அணுகவும். மருத்துவர் பாதிப்படைந்த இடத்தை நன்கு பரிசோதித்து, நோயின் தீவிரப்படி சிகிச்சை அளிப்பார்.
Image sources: Wikimedia, Pexels and Pixabay
COMMENTS (0)