Home / Women Health Tips in Tamil / சிறுநீர் தடங்களுக்கான அறிகுறிகளும் அதனை அணுகும் வழிமுறைகளும்
உங்கள் சிறுநீர்ப்பையில் உள்ள சிறு நீரை உங்களால் முழுமையாக வெளியேற்ற இயலாத நிலை தான் சிறுநீர் தடங்கல் எனப்படுகிறது. இந்த பிரச்சினை எந்த வயதினருக்கும் ஏற்படலாம் என்றாலும், பெரும்பாலும் முதியவர்களுக்குதான் இந்த சிக்கல் ஏற்படுகிறது. உங்களால் முழுமையாக சிறுநீரை வெளியேற்ற முடியாத பொழுது வலியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தும்.
Table of Contents
இரண்டு வகை சிறுநீர் தடங்கல் உள்ளன:
தீவிர சிறுநீர் தடங்களுக்கான அறிகுறிகள் இவை:
நீண்ட கால சிறுநீர் தடங்களுக்கான அறிகுறிகள் இவை:
சரியான நேரத்தில் இதற்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றால், தீவிர வலி, அசௌகரியம் போன்ற அபாயமான கட்டத்திற்கு இட்டுச் செல்லும். சிலசமயங்களில் உயிருக்கே ஆபத்தான நிலைக்கு கொண்டுச் செல்லும். கீழே குறிப்பிட்டுள்ள வீட்டு சிகிச்சை முறைகளை தவிர, மருத்துவரையும் அணுகவும்:
சிறுநீர் தடங்களுக்கான முக்கிய காரணம் புரோஸ்டேட் வளர்ச்சி ஆகும். இந்த காரணத்தினால் பெரும்பாலான ஆடவர் துன்புறுகின்றனர். சில மருந்துகள் புரோஸ்டேட் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன. அவை ஆல்ஃபா பிளாக்கர்ஸ் – அழ்புஜொஸின் (Alufozosin), தோக்ஷாஜோஸின் (Doxazosin), சீலொதொஸின் (Silodosin), தம்சுலோஸின் (amsulosin) மற்றும் 5 ஆல்ஃபா குறைப்பு தடுப்பான்கள் – பிநஸ்டேரைட் (Finesteride) மற்றும் துதஸ்தெறிதே (Dutasteride) போன்றவை ஆகும்.
குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள எந்த மருந்தையும் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகுதான் உபயோகிக்க வேண்டும்.
சிறுநீர் பையில் வீக்கம் இருந்தாலும் சிறுநீர் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவரின் சிகிச்சை முறை, ஆலோசனையுடன் சில வலி நிவாரணிகளும் தீவிர வலியிலிருந்து சற்று விடுதலைப் பெற உதவுகின்றன. மருத்துவர் அசிட்டமினோஃபென் (Acetaminophen) அல்லது இபுப்ரோபின் (இபுப்ரோபின்) மாத்திரைகளை வலியை நீக்க பரிந்துரைப்பார்.
சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் கோளாறுகளுக்கு புதினா எண்ணெய் ஒரு பயனுள்ள இயற்கை வழி வைத்தியமாக திகழ்கிறது. உங்கள் கழிப்பறை இருப்பிடத்தில் சில சொட்டுகள் புதினா எண்ணெய் ஊற்றவும். பின் அதில் உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் பொழுது அந்த எண்ணெயிலிருந்து வரும் ஆவி உங்கள் உடலுடன் சேர்ந்து நீங்கள் எளிதாக சிறுநீர் கழிக்க உதவுகிறது.
வலி நிவாரணத் தன்மையை கொண்டது டான்டேலியன் மலர். பண்டையக் காலத்திலிருந்தே இம்மலர் ஜீரணக் கோளாறுகள் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகளை குணமாக்க உபயோகப் படுத்தப்பட்டு வந்தது. தினசரி இரு வேளை டான்டேலியன் மலர் தேநீர் பருகுவது சிறுநீர் தடங்கலுக்கு சற்று தீர்வு தரும்.
அநேகமாக அனைத்து மருந்து கடைகளிலும் எளிதாக கிடைக்க கூடிய ஆயுர்வேத மருந்து இந்த ஷ்வெட் பார்பதி. இது சிறுநீர் கழிப்பதை சீராக்கி, சிறுநீர் பையிலிருந்து சிறுநீரை முழுமையாக வெளியேற்றுகிறது. ஒரு கிராம் ஷ்வெட் பார்பதி எடுத்து அதை தேன் அல்லது மிதமான சூட்டில் உள்ள வெந்நீருடன் கலக்கவும். இதை தினசரி மூன்று வேளையாவது அருந்தவும். சிறுநீர் தடங்களுக்கான எளிமையான வைத்தியம் இது.
Image Sources: Ohsimply.com, medical news today, the practical herbalist
COMMENTS (0)