Home / Women Health Tips in Tamil / பெண்களுக்கு ஏன் பாப் ஸ்மியர் சோதனை அவசியம்?
கருப்பை வாயில் உள்ள அணுக்கள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் பொழுது கருப்பை வாய் புற்று நோய் ஏற்படுகிறது. இது பொதுவாக ஐம்பது வயதிற்கும் மேற்பட்ட பெண்களிடம் கண்டறியப்படுகிறது. இவ்வகை புற்றுநோய் பெண்களிடையே இப்பொழுது பெரிதும் காணப்படுகிறது. இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே பாப் ஸ்மியர் சோதனையின் மூலம் கண்டறியலாம்.
கருப்பை
கருப்பை வாய்
புற்றுநோய்
யோனி
Table of Contents
பொதுவாக, புற்றுநோயை குணப்படுத்துதல் மிகக் கடினம். ஆனால் புற்றுநோயைத் தவிர்க்க பல சோதனைகள் உண்டு. அவற்றுள் ஒன்று தான் பாப் ஸ்மியர் சோதனை.
பெண்கள் பாப் ஸ்மியர் சோதனை செய்து கொள்வது மிக அவசியம். இந்த சோதனையில் கருப்பை வாயில் உள்ள சில அணுக்கள் ஆராயப்படும். நுண்ணோக்கி மூலம் இந்த அணுக்கள் ஆராயப்படுவதால் ஏதேனும் அணுக்கள் புற்று நோய் அணுக்களாக மாறி உள்ளதா என்று துல்லியமாக அறியலாம். அவ்வாறு புற்று நோய் அணுக்களாக மாறி இருந்தால், எந்த நிலையில் புற்று நோய் உள்ளது என்பதையும் இந்த சோதனையில் அறிந்து கொள்ளலாம். இந்த சோதனையை மேற்கொள்ளும் முன் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.
பாப் ஸ்மியர் சோதனையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை அழுத்தவும்:
பாப் ஸ்மியர் சோதனை முறையாக செய்யப்பட்டால் கருப்பை வாய் புற்றுநோயின் மூலம் ஏற்படும் இறப்பை பெரிதும் தவிர்க்கலாம். இந்த சோதனையை முறையாக செய்து கொண்டு கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுப்போம் என்று நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
பட மூலம்: ஹெல்த்.மில், விக்கிமீடியா காமன்ஸ்
COMMENTS (0)