Home / Uncategorized / பொடுகை நீக்க நிரூபிக்கப் பட்ட 10 வீட்டு வழிமுறைகள்
பொடுகுத் தொல்லை மிகவும் பரவலாகக் காணப்படும் பிரச்சனைகளுள் ஒன்று. இது இரு வகைப்படும் – ஒன்று தோல் வறட்சியினால் ஏற்படுவது, இரண்டாவது, தோலில் அதிகம் எண்ணெய் கசிவதினால் ஏற்படுவது. இந்த நிலைக்கு நிறைய காரணங்கள் உண்டு. அவற்றுள் சில:
காரணம் எதுவாக இருந்தாலும், பொடுகுத் தொல்லையைத் தீர்க்க பல வீட்டு வழிமுறைகள் உண்டு
Table of Contents
ஆஸ்பிரினில் உள்ள சாலிசிலிக் அமிலத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. அதில் ஒன்று பொடுகை அழிக்க பயன்படுகின்றது. இரண்டு ஆஸ்பிரின் மாத்திரைகளை போடி செய்து உங்கள் ஷாம்பூவில் கலக்கவும். இந்த கலவையை உங்கள் முடியில் போட்டு சில நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு சாதாரண ஷாம்பூவினால் அலசவும்.
சமையல் சோடா போன்ற சில சமையலறை பொருட்கள் பொடுகை நீக்கும் சிகிச்சையில் உபயோகப்படுகின்றன. முடியில் சிறிது நீரை ஊற்றி சிறிதளவு சமையல் சோடாவை தேய்க்கவும். சிறிது நேரம் கழித்து ஏதேனும் ஷாம்பூவினால் கழுவவும்.
வாய் கழுவும் திரவத்தில் உள்ள மதுப் பொருள் பொடுகை நீக்கும் வல்லமை கொண்டது. பூஞ்சையை அழிக்கும் திறனும் கொண்ட இந்த திரவம் ஈஸ்ட் உருவாகுவதைத் தடுக்கும்.
குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு 3-5 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி முடியை மசாஜ் செய்யவும். பிறகு ஏதேனும் ஷாம்பூவினால் எண்ணெயை கழுவி விடவும். தேங்காய் எண்ணெய் கொண்ட ஏதேனும் ஷாம்பூவை உபயோகிக்கலாம்.
உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் எலுமிச்சை இருந்தால் உங்கள் வேலை பாதி முடிந்தது போல. 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறை முடியில் விட்டு மசாஜ் செய்யவும். ஒரு குவளை நீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறைக் கலந்து முடியை கழுவவும். பொடுகு நீங்கும் வரை இந்த முறையைப் பின்பற்றவும்.
கற்றாலையின் குளிர்ச்சியூட்டும் தன்மை அரிப்பை மட்டுப்படுத்தி பொடுகை நீக்க உதவும். ஷாம்பு போடும் முன்பு கற்றாழையை உங்கள் தலையில் மசாஜ் செய்யவும்.
பொடுகை நீக்க ஆலிவ் எண்ணெய் சிறந்த மருந்து. இரவு 10 சொட்டு ஆலிவ் எண்ணெயை தலையில் விட்டு மசாஜ் செய்யவும். காலை எழுந்து ஷாம்பூவினால் முடியை அலசவும்.
பொடுகை நீக்க தயிர் உபயோகிப்பது ஒரு பொதுவான மருத்துவம் ஆகும். தயிரில் உள்ள நுண்ணுயிரி உடலில் ஈஸ்ட் உருவாகுவதைத் தடுக்கின்றது. ஷாம்பூ போட்டு அலசி விட்டு முடியில் தயிரை போட்டு 15 நிமிடம் அப்படியே விடவும். பிறகு ஷாம்பூவினால் மறுபடி அலசவும்.
விளக்கெண்ணெயில் உள்ள ரிசிநோலீக் அமிலம் பொடுகு மற்றும் சிரங்கை நீக்கும் வல்லமை கொண்டது. விளக்கெண்ணெயை சிறிது சூடு படுத்தி தலையில் போட்டு எண்ணெய் முற்றிலும் உரியும் வரை மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் ஷாம்பூவினால் அலசவும்.
வைட்டமின் E கொண்ட ஜோஜோபா எண்ணெய் வறண்ட தலைக்கு ஊட்டமளித்து நீர் பசையுடன் வைத்திருக்க உதவும். முடி வளர்வதை ஊக்கப்படுத்தும். எண்ணெயை சூடு படுத்தி தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். 20 முதல் 25 நிமிடம் வைத்திருந்து ஷாம்பூவினால் கழுவவும்.
பட மூலம் – மெட்ஸ்கேப், லைப்எல்த், பியான்ட் பியூட்டி, ட்ரீம்ஸ்டைன், பொதிகை எக்ஸ்பர்ட், ப்ராண்ட் ஈட்டிங், MJA ஷிண்டா டிரேடிங் SA, லங்கா எக்ஸ்போர்ட்
COMMENTS (0)