Home / Home Remedies in Tamil (வீட்டு வைத்தியம்) / முகச்சுருக்கத்தை குறைக்கும் 5 வீட்டுதயாரிப்பு மாஸ்க்குகள்
கடைகளில் விற்கும் முதுமையை தள்ளிப்போடும் ஆன்டிஏஜிங் பொருட்களை வாங்கி உபயோகித்து சலித்து விட்டதா? அல்லது முகச்சுருக்கங்களை நீக்கும் அழகு சாதன பொருட்களுக்காக நிறைய செலவழித்தும் பிரயோஜனம் இல்லை என்ற வருத்தம் இருக்கிறதா? கவலை வேண்டாம். நம் வீட்டு சமையலறையில் இருக்கும் அடிப்படையான சில பொருட்களை வைத்தே மிக சுலபமான, எளிமையான மாஸ்க்குகள் செய்ய முடியும். அவற்றை நம் சௌகரியப்படி பயன்படுத்தி எப்பொழுதும் இல்லாத அளவு புத்துணர்ச்சியான சருமத்தை பெறலாம்.
Table of Contents
பாதி குடமிளகாயை வெட்டி அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஓட்ஸ், பால் சேர்த்து நன்கு அரைக்கவும். உறங்க செல்வதற்கு முன், அதை உங்கள் முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தை கழுவி, சுத்தமான துணியால் துடைக்கவும். உறுதியான சருமத்தை பெற வாரத்திற்கு இரு முறை இந்த முறையை பின்பற்றவும்.
இது எப்படி வேலை செய்கிறது?
குடமிளகாய் கொலாஜன் நிலையை ஊக்குவித்து, சுருக்கத்தை தடுக்கிறது. தேன் இயற்கையான மாய்ஸ்ட்ரைசர். பாலில் உள்ள வைட்டமின்B சருமத்தை பாதுகாக்கிறது. ஓட்ஸ் சேதமடைந்த சருமத்தை பழுது பார்க்கிறது.
மிக சுலபமாக கிடைக்க கூடிய பப்பாளி சுருக்கம் வராமல் தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. உறங்கச் செல்லும் முன் பப்பாளி பழ விழுதை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி இரவு முழவதும் வைத்திருங்கள். அடுத்த நாள் காலை வெது வெதுப்பான நீரினால் கழுவி விடவும். வாரம் மூன்று முறை இவ்வாறு செய்வதன் மூலம் முகச் சுருக்கங்களிளிருந்து விடுதலை பெறலாம்.
இது எப்படி வேலை செய்கிறது?
பப்பாளியில் உள்ள கரோட்டினாய்டுகள் சருமத்தில் ஏற்ப்பட்டுள்ள தளர்வு மற்றும் சுருக்கத்தை சரி செய்கிறது. மேலும் அதில் உள்ள பாப்பெயின் என்னும் புரதம் இறந்த உயிரணுக்களை அகற்றுகிறது.
இரண்டு சுமாரான அளவுள்ள உருளைகிழங்கை வெட்டி துண்டுகளாக்கி ஆப்பிளுடன் சேர்த்து அரைது விழுதாக்கிக் கொள்ளவும். அதை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 30 நிமிடங்கள் கழித்து நீரினால் கழுவவும். இந்த மாஸ்க் முகச் சுருக்கத்தை நீக்குவதோடு மட்டுமல்லாது முகத்திற்கு பொலிவையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும்.
இது எப்படி வேலை செய்கிறது?
உருளைகிழங்கில் உள்ள ப்ளீச்சிங் என்சைம் சருமத்தை பளிச் என்றாக்கி, துளைகளை குறைத்து, சரும அடுக்குகளை இறுக்கி, சரும எரிச்சல் இருந்தால் அகற்றி ஆரோக்ய சருமத்தை அளிக்கிறது.
ஒரு ஆப்பிளை தண்ணீரில் வேகவைத்து ஆற விடவும். விதைகளை அகற்றி நன்கு விழுதாக்கவும். அத்துடன் ஒரு தேக்கரண்டி தேன், பால் சேர்த்து குழைக்கவும். இவ்விழுதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.
இது எப்படி வேலை செய்கிறது?
கொலாஜன் நிறைந்த ஆப்பிள் சுருக்கங்களை அகற்றி, மெலனின் உற்பத்தி செய்வதால் சரும நிறத்தை ஒளிர செய்கிறது.
10 பாதாம் பருப்புகளை, ஒரு கிண்ணம் கொழுப்புள்ள பாலில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். பாலுடன் ஊறிய பாதமை அரைத்து விழுதாக்கி முகத்தில் இரவு தடவவும். மறுநாள் காலை முகத்தை நீரினால் கழுவி சுத்தமான உலர் துணியால் ஒற்றி எடுக்கவும்.
இது எப்படி வேலை செய்கிறது?
பாதாம், பாலுடன் சேர்வதால் உண்டாகும் வைட்டமின் E, ஆன்டிஆக்ஸ்டன்ட்கள், ஃபோலிக் அமிலம், ஹைட்ராக்ஸி அமிலம் போன்றவை கொலாஜன்களை உற்பத்தி செய்து முகச்சுருக்கங்களை நீக்க உதவுகிறது.
COMMENTS (0)