Home / Skincare Tips in Tamil / விரைவாக தசைகளை மினுமினுக்கச் செய்யும் ஐந்து வகை எளிய வீட்டு வைத்திய முறைகள்
பளபளக்கும் புஷ்டியான மேனிதான் எல்லா பெண்களின் கனவும். ஆனால், பெண்களுக்கு, அழகு நிலையம் சென்று தன் மேனி எழிலைப் பராமரிக்கும் வாய்ப்பு பெரும்பாலும் கிடைப்பதில்லை.
அதனால், விரைவாக தசைகளை மினுமினுக்கச் செய்யும் ஐந்து வகை எளிய வீட்டு வைத்திய முறைகளை இங்கே தந்துள்ளோம்.
Table of Contents
கோகோ பவுடர் கேக்குகளுக்கு மட்டும் சுவை கூட்டுவதில்லை; உங்கள் முகத்தையும் பொலிவுறச் செய்கிறது. இரண்டு தேக்கரண்டி கோகோ பவுடர், மூன்று தேக்கரண்டி கெட்டித்தயிர், ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் நன்கு மசிக்கப்பட்ட பாதி வாழைப்பழம் ஆகியவற்றை நன்றாகக் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் முகமூடிபோல் சீராகத் தடவி ஒரு இருபது அல்லது இருபத்து ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவிக் கொள்ளவும். இது உங்கள் முகத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும்
கற்றாழைக்கூழ் முகத்திற்கு இயற்கையான மினுமினுப்பைத்தரும். ஒரு தேக்கரண்டி கற்றாழைக்கூழ், இரண்டு தேக்கரண்டி சந்தனப்பொடி, ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் பன்னீரை நன்றாகக் கலந்து முகத்தில் முகமூடிபோல் தடவிக் கொண்டு ஒரு பத்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவும். பிறகு முகத்தை கழுவிக் கொள்ளவும். இந்த கலவை முகத்தை ஈரப்பதத்துடன் மினுமினுப்பாக வைத்திருக்கும்.
ஒரு சிறிய வெள்ளரிக்காயை நறுக்கி அதனுடன் இரண்டு மூன்று தேக்கரண்டி தயிரைச் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும். இந்தக் கலவையை முகத்திலும் கழுத்திலும் தடவிக்கொண்டு நன்கு காயும் வரை ஊறவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிக்கொள்ளவும். வெள்ளரி முகத்தை எப்போதும் புதுப் பொலிவுடன் வைத்திருக்கவும், இலேசாக வைத்திருக்கவும் உதவுகிறது.
முகத்தில் ஏற்படும் கருவளையங்களையும், கருந்திட்டுக்களையும் நீக்குவதற்கு வைட்டமின் ஈ எண்ணெய் மிகுந்த பயனை அளிக்கிறது. ஒரு வைட்டமின் ஈ மாத்திரையுடன் மூன்று அல்லது நான்கு சொட்டு பாதாம் எண்ணெயை கலந்து தினமும் முகத்தில் தடவி, கைகளால் மிருதுவாக தசைகளை உருவிவிடவும். இந்தக் கலவை கருமை நிற திட்டுக்களைப் போக்க வல்லது.
வைட்டமின் சி, வெப்பத்தின் தாக்கத்திலிருந்து நமது உடற்தோல்களைப் பாதுகாத்து ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க் உதவுகிறது. இரண்டு வைட்டமின் சி மாத்திரைகளை உடைத்து அதனுடன், இரண்டு தேக்கரண்டி பன்னீர், ஒரு தேக்கரண்டி தேன் கலந்து உங்கள் முகத்தில் தடவிக்கொண்டு பத்து நிமிடங்கள் கழித்து கழுவிக்கொள்ளவும். அடுத்த மூன்று நாட்களுக்கு உங்கள் முகம் பளபளப்பாக இருக்கும்.
COMMENTS (0)