Home / Women Health Tips in Tamil / பித்தப்பையில் கல்லடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள்
பித்தப்பை கற்கள் உருவாக காரணம் மற்றும் அதற்கான சிகிச்சை
இப்பொழுதெல்லாம் பித்தப்பையில் கற்கள் உண்டாவது, பெரும்பாலானவர்களுக்கு இருக்கின்றது. சிலருக்கு சிறு நீரகத்திலும், சிலருக்கு பித்தப்பையிலும் கற்கள் உண்டாகின்றன. சிலர் இதனை கவனிக்காமல் அப்படியே விட்டுவிடுவது நல்லதல்ல; பித்தப்பையில் உண்டாகும் கற்களால் நாளடைவில் புற்று நோய் வரக்கூடிய அபாயம் இருக்கிறது.
உடலில் உண்டாகும் கொழுப்பு, சாதாரணமாக பித்தப்பையில் கரைந்து விடும். அவ்வாறு கரையாத கொழுப்புகள் சேர்ந்து ஒரு கல் போன்று வடிவம் பெறுகின்றன. சிறிய அளவிளான கற்கள், நமது உடலில் தங்காமல் வெளியேறிவிடும். பெரிய கற்கள் மிகுந்த ஆபத்தானவை.
பித்தப்பையில் கற்கள் உண்டாவதற்கு ஒரு குறிப்பிட்ட காரணம் கிடையாது.எனினும் மருத்துவர்கள் கீழ்கண்ட காரணங்களால் பித்தப்பையில் கற்கள் உண்டாவதாகக் கூறுகின்றனர்.
கொழுப்பு அதிகமாதல்:
பொதுவாக, உடலில் கொழுப்பு அதிகமாவதால், பல்வேறு பிரச்சினைகள் தோன்றும். அதனால், பித்த நீர் உடலில் தேங்கிவிடும் அபாயம் ஏற்படும். இதனால், இரத்தத்தில் அதிகமாக கொழுப்பு சேர்ந்து, அதன்மூலம், பித்தப்பையில் கற்கள் உண்டாகலாம்.
பித்தத்துகள்கள் (பில்லிருபின்) அதிகமாக உற்பத்தியாதல்:
கல்லீரலில் உள்ள பழைய இரத்தச் சிவப்பணுக்கள் செயலிழந்தழியும்போது, பித்தத்துகள்கள் உடலில் உற்பத்தியாகின்றன. சில நேரங்களில் கல்லீரல் பழுதாவதாலும், இரத்த ஓட்டத்தில் சீரின்றி மாறுபடுவதாலும், கல்லீரலில் பித்த துகள் உற்பத்தி அதிகரிக்கின்றது. அதுவே, பின்னர் பித்தக்கல்லாக உருவாகிறது.
பித்தப்பை காலியாகமல் இருப்பது:
பித்தப்பை முழுவதுமாக காலியாகாமல், பித்த நீர் இருந்தபடியே இருப்பதால், பித்தச்சுரப்பாங்கள் சேர்ந்து பித்தப்பையில் கல்லாக உருவாகிறது. சில நேரங்களில், பித்தப்பையில் கல் இருப்பதை நாம் உணரக்கூட மாட்டோம். பித்தப்பையில் அடைப்பு ஏற்படும் போதோ அல்லது வலி உண்டாகும் போதோ தான் நமக்கு தெரியவரும்.
பித்தப்பையில் கல் இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்:
பித்தப்பை கற்களை கண்டறிய, கீழ்க்கண்ட பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
Table of Contents
உயர் அழுத்த அதிர்வெண் ஒலி அலைகளின் மூலம் நமது உடலிலுள்ள பாகங்களின் உட்புறத்தை படமெடுத்துக்காட்டும் அல்ட்ரா சவுண்ட், பித்தப்பை கற்களின் இருப்பிடத்தை துல்லியமாக கணக்கிட்டுக் காட்டுகிறது. இது பொதுவாக எல்லோரும் பயன்படுத்தும் ஒரு பரிசோதனை முறை ஆகும்.
அல்ட்ரா சவுண்ட் மூலம் கண்டறியப்படாத சிறிய கற்களைக் கண்டறிய மருத்துவர்க்ள் சி டி ஸ்கேன் பயன்படுத்துகிறார்கள். இதன்மூலம், சிறிய கற்களின் இருப்பிடத்தை கண்டறிந்து அவற்றை கரைக்க முடியும்
பித்தப்பை கற்களால் ஏற்படும் தொற்றுக்களை எளிதில் கண்டறிய இரத்தப்பரிசோதனை பயன்படுகிறது. பித்தப்பை கற்களால் ஏற்படும் தொற்றின் பாதிப்பால் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் அதிகமாவதை, இரத்தப்பரிசோதனையில் செய்யப்படும், இரத்த அணுக்களின் எண்ணிக்கை சோதனை மற்றும் சி பி சி டெஸ்ட் ஆகியவை துல்லியமாகத் தெரியப்படுத்துகின்றன. எந்த ஒரு தொற்றையும், ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்தால், குணப்படுத்துவது எளிது. பொதுவாக இவ்வகை தொற்றுக்கள் நீங்குவதற்கு நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை வழங்குகிறார்கள்.
பித்தப்பை கற்களை அகற்றும் சிகிச்சை முறை:
பித்தப்பை கற்கள் அடிக்கடி உருவானால், மருத்துவர்கள் லேப்பொரோஸ்கோஃபி அறுவைச்சிகிச்சை மூலம் பித்தப்பையை அகற்றிவிடும் படி அறிவுறுத்துவார்கள். இவ்வாறு அகற்றிவிடும் போது, பித்தத்துகள்கள் நேரடியாக கல்லீரலிலிருந்து, குடற்பகுதியை சென்றடைந்துவிடும். பித்தப்பை அகற்றப்பட்ட பிறகு, கல்லீரலில் தேவைப்படும் பித்த நீர் சுரந்துகொண்டிருக்குமாதலால், பொதுவாக உடலில் எந்த தொந்தரவும் இருக்காது. இந்த அறுவை சிகிச்சைக்குப்பிறகு, நோயாளிகள், மிதமான கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை உண்ணும் படி அறிவுறுத்தப்படுவார்கள்.
வெறும் மருந்து மாத்திரைகளைக்கொண்டே பித்தப்பை கற்களை நீக்கிவிட முடியும். ஆக்டிகால் (உர்சோடியால்) என்னும் மாத்திரை, பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. கற்களின் அளவு மற்றும் எண்ணிக்கையை பொறுத்து, சில மாதங்களிலோ அல்லது சில வருடங்களிலோ பித்தப்பை கற்கள் முற்றிலுமாக கரைந்துவிடும்
மூலப்படங்கள் பிக்ஸாபே, விக்கிமீடியா ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது
COMMENTS (0)