Home / Skincare Tips in Tamil / ஒருபோதும் உங்கள் முகத்தில் கண்டிப்பாக நீங்கள் உபயோகிக்க கூடாத 7 பொருட்கள்
கிட்டத்தட்ட இருபது வருடங்களாக முகத்தில் ஆயுர்வேத மற்றும் இயற்கை பொருட்களை உபயோகிக்கும் பழக்கம் நம் பெண்களிடம் இருந்து வருகிறது. அவ்வாறு உபயோகிக்கும் பொழுது முகத்தின் சருமத்தை பாதிக்கும் சில பொருட்களை தன்னையறியாமல் உபயோகித்து விடுகின்றனர். அழகு மற்றும் சரும நிபுணரான ஷாஹ்னாஸ் ஹுசைன், முகத்தில் போடக் கூடாத சில பொருட்களைப் பற்றி உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறார்:
Table of Contents
எந்த வகை வினிகரிலும் அதிகப்படியான அமிலத்தன்மை இருப்பதால் அது உங்கள் முகத்தை பாதிக்கக் கூடும். வினிகரில், தண்ணீர் கலந்து அதை நீர்க்கச் செய்தால், அதன் அமிலத்தன்மை குறையும். அவ்வாறு செய்தப் பின் உபயோகிப்பதே சரியான முறையாகும்.
பீரிலும் அமிலத்தன்மை உள்ளது. அதனால் இதை அடிக்கடி முகத்தில் உபயோகித்தால், உங்கள் முகத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் பசை வறண்டு உங்கள் முகத்திற்கு வறட்சியான, பொலிவில்லாத தோற்றத்தை தரும். மேலும் இதனால் பருக்கள் உண்டாகும் வாய்ப்பும் உண்டு.
அதிகப்படியான பேகிங் சோடாவை முகத்தில் போடுவது ஆபத்தை விளைவிக்கும். பேகிங் சோடா காரத் தன்மை வாய்ந்தது. அதனால் உங்கள் சருமத்தின் PH அளவையும் அது காரத்தன்மை / ஆல்கலைன் மிக்கதாக்கி விடும். அதனால் உங்கள் முகம் பொலிவிழக்கும். மேலும் அதனால் உங்கள் முகத்தில் பருக்கள் சிறு கட்டிகள் உண்டாகலாம்.
புதினா இயற்கையான புத்துணர்வை அளிக்கக் கூடிய ஒரு இலை என்றாலும், அதில் உள்ள மென்தால் முகத்தில் சிவப்பு புள்ளிகள் மற்றும் பருக்களை தோற்றுவிக்கிறது. அடிக்கடி புதினா முகத்தில் போடுபவர்களுக்கு, சருமம் கருமை அடைவதாகவும் கூறப்படுகிறது.
சில பற்பசைகளில், பலவகைப்பட்ட ரசாயனங்கள் சேர்ந்திருப்பதால் உங்கள் சருமத்தின் மெருகை அது குறைத்து விடும். மேலும் உங்கள் சருமத்தை பாதிக்கும். முகத்தில் அதிகப்படியாக பற்பசை உபயோகித்தால், அது உங்கள் முகத்தில் சுருக்கங்கள் உண்டாக செய்கிறது.
ஷாஹ்னாஸ் ஹுசைன் கூற்றுப்படி, உடல் லோஷன் என்பது உங்கள் உடலில் உபயோகிப்பதற்குத்தான் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அது உங்கள் முகத்தில் உபயோகிப்பதற்கு அல்ல என்கிறார். உடல் லோஷனில் பல வகையான ரசாயனங்கள் சேர்க்கப் பட்டிருப்பதால் அதை நீங்கள் உங்கள் முகத்தில் போடும் பொழுது, முகத்தின் மென்மையான சருமத்தை பாதிக்கிறது. முகத்திற்கென்று விற்கப்படும் பிரேத்யகமான முக க்ரீம்களை தான் முகத்தில் போட வேண்டும்.
எண்ணெய் பசை மற்றும் ஒட்டும் பிசு பிசு தன்மை உடைய வாசலின் முகத்திற்கு ஏற்ற அழகு சாதனப் பொருள் அல்ல. அதை நீங்கள் முகத்திற்கு உபயோகித்தால் தூசி, அழுக்கு போன்றவை முகத்தில் ஒட்டிக் கொண்டு உங்கள் முக சரும துவாரங்களுக்கு மேல் மற்றொரு அடுக்கை உருவாக்கி விடும். இதனால் சரும துவாரங்கள் அடைப்பட்டு உங்கள் சருமம் பாதிப்படைகிறது.
ஒருவர் முதலில் தங்கள் சருமம் எந்த வகையை சார்ந்தது என்பதை கண்டறிந்து, அதற்கேற்ற பொருகளை உபயோகிப்பதே சிறந்தது என்கிறார் ஷாஹ்னாஸ் ஹுசைன். அளவுக்கு அதிகமாக எதையுமே உபயோகிக்க கூடாது. அவ்வாறு செய்தால் உங்கள் சருமத்தில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கி விடும்.
To view the complete video by Shahnaz Hussain, click below:
Image Source: www.wikimedia.org, www.wikipedia.org, www.projectwellnesscompany.com www. Public Domain Pictures.net www.flickr.com,www.pexels.comwww.pixabay.com www. sabah.com.
COMMENTS (0)