Home / Uncategorized / புற்று நோய் உருவாக்க கூடிய ஒன்பது வகையான உணவு பழக்கங்கள்
ஆண்டுதோறும் 16% சதவிகித மக்கள் புற்று நோயால் பாதிக்கப் பட்டு இறக்கிறார்கள். நாம் அன்றாடம் வழக்கமாக உட்கொள்ளும் சில ஆரோக்கியமற்ற உணவு வகைகளே, புற்று நோய் உருவாகக் காரணம் என்பதை அறிந்தால் திகைப்பீர்கள்.
புற்று நோய் வராமல் தடுப்பதற்கு, நாம் தவிர்க்க வேண்டிய சில உணவுப் பழக்கங்களையும், நம் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டிய ஆரோக்கியமற்ற உண்ணும் முறைகளையும் இங்கே காண்போம்
Table of Contents
வெறும் வயிற்றில் நாம் உண்ணும் எலுமிச்சை, நார்த்தங்காய் சாறு வகைகள், நமது உடலில் உள்ள “கால்குலேசிஸ்” என்னும் அமிலத்தை அதிகமாக சுரக்கச் செய்து, வயிற்றுப் புற்று நோய் வரக் காரணமாகிறது.
நீங்கள் கொதிக்க கொதிக்க, மிகச் சூடான உணவுகளை உண்பவரா? மிகச் சூடான தேநீரை அருந்தும் வழக்கம் உள்லவரா? வயிற்றை அதிகச் சூடான நிலையில் வைத்திருக்கும் இவ்வகை பழக்கங்களை நீங்கள் உடனே மாற்றிக் கொள்ள வேண்டும். சூடான வெப்ப நிலை, வயிற்றைப் பாதித்து புற்று நோய் வரக் காரணமாகிறது
சிலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, பத்திய உணவு என்ற பெயரில், முற்றிலும் கொழுப்புச் சத்து இல்லாத அல்லது குறைந்த அளவு கொழுப்புச் சத்து கொண்ட உணவுகளை உண்பதை வழக்கமாக கொள்வர். இத்தகைய உணவுகளே புற்று நோய் காரணிகளாக மாறி புற்று நோய் உருவாக காரணமாகி விடுகிறது.
அன்றாடம் நாம் சந்தையில் வாங்கும் காய்கறி மற்றும் பழ வகைகளில்,, அதிகப்படியான பூச்சிக்கொல்லிகள் இருக்கும். ஆகவே, இவைகளை சாதாரண நீரில் கழுவுதல் நல்லதல்ல. தொடர்ச்சியாக இவைகளை உட்கொள்வதும் புற்று நோய் உருவாகக் காரணமாகிறது. இதை தவிர்க்க, காய்கறி மற்றும் பழங்களை வினிகரில் கழுவி, சமைத்து உண்பதும், இயற்கை முறையில் பயிரிடப்பட்ட (organic) காய்கறி மற்றும் பழங்களை உண்பதும் ஆரோக்கியமானது.
ஒட்டும்தன்மையற்றசமையல்உபகரணங்கள், “டெஃப்ளான்” எனப்படும் நிறமற்ற பிளாஸ்டிக் மூலகபூச்சினால் உருவாக்கப்படுகிறது. நாளாக, நாளாகஇந்த “டெஃப்ளான்” சிறிதுசிறிதாக, அப்பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவுப்பொருளோடு கலந்து நமது உடல்நலத்தைப் பாதிக்கிறது. அலுமினியம் அல்லது இருப்புபாத்திரங்கள் உபயோகிக்கச்சிறந்தது.
டின் களில் அடைக்கப்பட்ட உணவில் “பி.பி.ஏ.-பிஸ்பினால்” என்னும் வேதிப் பொருள் உள்ளது. இது உணவில் கலப்பதால் மனித மூளையில் உள்ள செல்கள் பாதிப்படைவதாக சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, புதிதாக சமைக்கப்பட்ட உணவுகளையே உட்கொள்வது சிறந்தது.
அளவுக்கதிகமாக உட்கொள்வதால் கொழுப்பு சேர்வதால் வயிறு உப்புவது மட்டுமல்ல, பெருங்குடல், பித்தப்பை, , உணவுக்குழாய், மார்பகம், சிறுநீரகம், கணையம் மற்றும் கர்ப்பப்பை புற்று நோய்கள் வரக் காரணமாகிறது. வாழ்வது சாப்பிடுவதற்காக மட்டுமல்ல என்பதை உணர்ந்து அளவாக உட்கொள்ளவும்.
உறைய வைத்த உணவுப்பண்டங்களில் “நைட்ரேட்” எனப்படும் வேதிபொருள் உருவாகிறது. மரபணு மாற்றப்பட்ட தாவர வகைகளிலும், சில வேதிப் பொருட்கள் உள்ளன. இவை புற்று நோய் உண்டாக்கும் அபாயம் உள்ளது. சோயா, சோயாதயிர், காளான் போன்ற உணவுவகைகளைத் தவிர்ப்பது சிறந்தது.
ஓவனில் வைத்து வாட்டப்பட்ட (grilled) மாமிசங்கள் கண்கவரும் வகையில், தயாரிக்கப்படும். இத்தகைய மாமிச உணவில், “கார்சினோஜென்” எனப்படும் வேதிப்பொருள் உருவாகி புற்று நோய் உண்டாகக் காரணமாகிறது. மாமசங்களை நீண்ட நேரம் சமைத்து உண்பது (SLOW COOKING), கொதிக்கவைத்து உண்பது மற்றும் பேகிங் (BAKING) செய்யப்பட்ட மாமிசங்களை உண்பதே சிறந்தது.
இந்த எங்களது சிறிய அறிவுரைகளை ஏற்று, அதன்படி உங்கள் உணவுப் பழக்கங்களை மாற்றிக் கொண்டு, புற்று நோய் வராமல் காத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.
COMMENTS (0)